02-08-1931 - குடிஅரசிலிருந்து....
நான் இந்து மதத்தைப்பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தி னுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதி விடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாண வனுக்குக் கொடுத்து விடுங்கள் அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலையில்லை. ஆனால், நான் பேசுவது என்பது இரண்டு மதத்தைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் பெரும் பான்மை யான மக்களிடை இருந்து வரும் பிரத்தி யட்சக் கொள்கைகள் சம்பந்த மானக் காரியங்களையும் அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித் தான் பேசுகிறேன்.
பொதுவாகவே மதத்தின் தன்மையை இதிலிருந்துதான் நிர்ணயிக்க வேண்டுமே யொழிய ஏட்டில் என்ன இருக்கின்றது என்று பார்ப்பதில் பயனில்லை. அது போலவே அந்தந்த மதக்காரர்கள் போட்டுக்கொள்ளும் வேஷமே தான் மதம் என்றாலும் அதிலும் பயனில்லை.
அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ளு கிறார்கள்? மக்கள் எப்படி நடத்தப்படு கின்றார்கள். அதனால் அந்த சமுகம் என்ன பலனடைந்திருக்கின்றது? என்பது போன்றவைகள் தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால் அநேக விஷயங் களில் இந்து மதத்தைவிட (கொள்கை களைவிட) இஸ்லாம் மதமே (கொள்கை களே) மேன்மை யான தென்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இஸ்லாம் மாணவர்களிடத்தில் இந்துக்களிடம் இல்லாத பல நல்ல கொள்கைகள் இருக்கின்றன. அதனால் இந்து மதத்தில் இல்லாதமேன்மை இஸ்லாம் மதத்தில் இருப்பதாகத்தான் கருதவேண்டும்.
அதாவது இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம் ஒற்றுமை அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் இலட்சியத்திற்கு உயிரை விட துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. கிட்ட இருந்து சாப்பிடக் கூடாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாத, மனிதன் குளத்தில் இறங்கக் கூடாதமனிதன், கோவிலுக்குள் புகக் கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.
இஸ்லாம் மார்க்கக் கடவுளுக்கு ரூபம் கற்பித்து வணங் குவதில்லை. அதற்குப்பெண்டு, பிள்ளை வைப்பாட்டி கற்பிப்பது மில்லை. அதற்குப் பூஜை, நைவேத் தியம், உற்சவம், நகை, துணிமணி, முதலியவற் றிற்குக் கோடிக் கணக்கான பணங்களைச் செலவு செய்வதில்லை மற்றும் அவர்களது பெண்களுக்குச் சொத்துரிமை, கல் யாண ரத்து, விதவை மணம் ஆகிய வைகளும் உண்டு. அவர்களுக்குள்ள அன்பையும் வீரத்தையும் பார்த்து நாம் அவர்களை முரடர்கள் என் கிறோம். அது போலவே இந்துக் களுக்குள் ஒருவருக் கொருவர் உள்ள துவேஷத் தையும் பயங்காளித் தனத்தையும் நாம் பார்த்து அவற்றைச் சாதுத்தன்மை என்று சொல்லிக் கொள்ளுகிறோம். ஒரு கிராமத்தில் ஒரு இஸ்லாமானவனை ஒரு இந்து அடித்தால் 100 இஸ்லாமானவர்கள் வந்து விழுந்து விடுகிறார்கள். இதைத்தான் நாம் முரட்டுத்தனம் என்கிறோம். ஒரு இந்துவை ஒரு இஸ்லாமானவன் அடித்தால் மற்ற இந்துக்கள் அவன் யாரோ அடிப்படுகிறான், நமக் கென்ன கவலையென்று சொல்லி சும்மா இருந்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் அடிக்குப்பயந்து கொள்ளுகிறார்கள். இதைத்தான் சாதுத்தனம் என்று பெருமை பேசிக்கொள்ளு கிறோம். அன்பும் சகோதரத் தன்மையும் இந்துவிடம் எங்கிருக்கின்றது? ஆடுகோழி தின்னாதே என்று சொல்லுவதில் மாத்திரம் இருக்கின்றது. மக்களை இழிவாய்க் கருதுவது பிறவியின் பேரால் தாழ்த்தி இம்சிப்பது, கொடுமைப்படுத்துவது ஆகிய காரியங்களைச் செய்து கொண்டிருப்பவன்தான் அன்பு! அன்பு!! ஜீவகாருண்யம்!!! என்று பேசுகிறான். அன்பின் உண் மையை அறியவே இல்லை. இஸ்லாம் கொள்கையில் வேறு எங்கு எப்படி இருந்தாலும் சமுக வாழ்விலும், ஆண்டவன் முன்னிலை என்பதிலும் மனிதனை மனிதனாய்க் கருதப்படுகின்றது.
இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமுக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும் மனிதனை மிருகத்தைவிட மலத்தை வாயில் கவ்விக்கொண்டு செல்லும் மிருகத்தை விடக் கேவலமாய் மதிக்கப்படுகின்றது. இதை நாம் பிரத்தியட்சத்தில் காண்கின்றோம். இதைத் தான் அன்புமதம் சமத்துவமதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.
மதத்தத்துவ நூலை வேதம் என்பதை இஸ்லாம் மார்க்கம் செருப்புத்தைக்கிற சக்கிலியும் மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும், பார்த்தாக வேண்டும், கேட்டாக வேண்டும் என்று சொல்லி கற்றுக்கொடுப் பதையும் பார்க்கிறோம். இந்து மார்க்க வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர (பார்ப்பான் தவிர) மற்ற யாவரும் அவன் பிரபுவா னாலும் சரி, ஏழையானானாலும் சரி , யோக்கியனானாலும் சரி, அயோக்கியனாலும் சரி ஒருவனுமே பார்க்கவும், கேட்கவும், படிக்கவும் கூடாது என்று இன்னும் நிர்ப்பந்தப்படுத்தி அந்தப்படியே இன்றும் நடந்து வருகின்றது. இதைத்தான் சமத்துவ நோக்கம் கொண்ட மதம் என்று இந்துக்கள் இன்றும் இன்னமும் சொல்லுகின்றார்கள்.
மொண்டி முடம், கூன், குருடு ஆகியவர்களுக்கே உதவி செய் என்று இஸ்லாம் மதம் பிரத்தியட்சத்தில் சொல்லுகின்றது. சோம்பேறிகளுக்கே ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவர்க்கே உதவி செய் என்று இந்துக்களின் கொள்கை பிரத்தியட்சத்தில் சொல்லுகின்றது.
இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்றுசேர்க்கின்றது. இந்தியாவில் கொஞ்சகாலத்திற்கு முன் ஒரு கோடியை விட குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய் சேர்ந்து இருக்கின்றார்கள். இன்றும் யாவரையும் எப்படிப்பட்ட இழிவான வரையும் எப்படிப் பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப் பட்டவர்களையும் தனக்குள் சேர்ந்துக்கொள்ள கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கை எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவர்களையும் உள்ளே விட மறுத்து வாசல்படியில் காவல்காக்கின்றது. தன்னவ னையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.
கள் குடியைப்பற்றி வாய்த்தப்பட்டை அடிக்காத இஸ்லாம் கொள்கை முஸ்லிம்களில் 100க்கு 99 பேர்களை குடியிலிருந்து விலக்கியிருக்கின்றது. குடிக்கக் கூடாதென்று சதா வாயில் தப்பட்டை அடித்துக்கொண்டு ஓட்டு வேண்டியபோது கள்ளுக் கடையில் நின்று மறியல் செய்யும் இந்து கொள்கையானது இந்துக் களில் 100க்கு 51 பேர்களுக்கு மேல் குடிக்காரர்களாகச் செய்திருப் பதோடு இந்து கடவுளுக்கும் குடி வகைகள் வைத்து கோயில் களில் பெரிய பெரிய ஜாதியார் என்பவர்களால் நைவேத்தியம் செய்து பிரசாதமாய் சாப்பிடப்படுகின்றது.
இஸ்லாம் கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத் தாலேயே இஸ்லாமியர்கள் அதிகமாயுள்ள நாடுகள் இஸ்லாம் அரசர்களால் ஆளப்படுகின்றன. இந்து கொள் கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இந்துக்கள் அதிகமாயுள்ள நாட்டை அந்நியர்கள் ஆளுகின்றனர். இந்தபடியாக வெளிப்படையாய்த் தெரியும் கொள்கை களாலேயே இந்துக் கொள்கைகளைவிட இஸ்லாம் கொள் கைகள் எவ்வளவோ மேன்மையானபலன் கொடுத்திருப் பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப்படி நான்சொல்லு வதற்காக கோபிக்கும் சகோதரர்கள் முதலில் நான் சொல்லுவது உண்மையா? அல்லது அடியோடு பொய்யா? என்று பார்த்துப் பேசுங்கள். பிறகு கொள்கைக்காக உயிரைவிடுங்கள்.
- விடுதலை நாளேடு 3. 8 .18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக