ஞாயிறு, 5 ஜூலை, 2015

பெரியார் கருத்துக்கள் இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவையே! - டில்லி பார்வேர்டு பிரஸ் இதழ் படப்பிடிப்பு

    

பார்ப்பனிய ஆதிக்கத்தை சாமானிய மக்களிடமும் கொண்டு சென்று
மகத்தான வெற்றி பெற்ற மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார்!
பெரியார் கருத்துக்கள் இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவையே!
இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும்

டில்லி பார்வேர்டு பிரஸ் இதழ் படப்பிடிப்பு

புதுடில்லி, ஜூன் 12_ பார்ப்பனிய ஆதிக்கத்தைச் சாதாரண மக்களிடமும் கொண்டு சென்று மிகப் பெரிய வெற்றியை ஈட்டி யவர் தந்தை பெரியார் அவர் கொள்கைகள் இன்றைக்கும் தேவையே இந்தியா முழுமையும் கொண்டு செல்ல வேண் டும் என்று டில்லியிலி ருந்து மாதம் இரு முறை வெளி வரும் இந்தி- இங்கிலீஷ் - இரு மொழி களிலும் வெளிவரும்  ‘Forward Press’ ஏடு ஆய்வு நோக்கோடு எழுதியுள் ளது.
அதிகரித்துவரும் இந் துத்துவ வெறி, வர்ண பேதம், அரசியலில் புகுந் துவிட்ட காவிக்கொள்கை களின் தாக்கத்தால் நடு நிலைவகிக்கும் மக்களும், சமூக அமைதியை விரும் பும் மக்களும் தற்போது பாபாசாகிப் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு சோச லிச கொள்கைகளை உயிர்மூச்சாக கொண்டு தூய நாத்திகனாக திகழ்ந்த பகத் சிங் போன்றோரின் கருத்துகளை மீண்டும் புதுப்பிக்கவேண்டிய காலத்தை உணர்ந்துள் ளனர்.
இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஜாதி பேதத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஒரு பிரிவினர் துண்டாடி தங்கள் பிழைப்பை நடத்திவந்தனர், இதனால் கடந்த நூற் றாண்டுவரை இந்தியா வில் சமூக ஒற்றுமை இல்லாமலிருந்தது, அடி மைத்தனமே ஜாதிரீதியாக மேலோங்கி இருந்தது.  இவற்றை எல்லாம் கண்டு பொங்கி எழுந்தது சமூக நீதியை மீட்டுக் கொடுத் தவர்களில் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா புலே போன்றோருடன் தென் இந்தியாவில் புகழ் பெற்ற ஈ.வெ.ராமசாமி என்ற பெயர் கொண்ட தந்தை பெரியாரும் முக்கியமானவர்.
வட இந்தியாவில் மிகவும் குறைந்த அளவு மக்களே ஈ.வெ.ராமசாமி என்ற பெரியாரை அறிந் துள்ளனர். தென் இந்தி யாவில் தந்தை பெரியார் என்ற பெயரை மக்கள் அதிகம் அறிந்திருக்கின் றனர். பெரியார் தென் இந்தியாவில் திராவிடர் கழகத்தை உருவாக்கியவர், திராவிடர் கழகத்தின் மூலம் பார்ப்பனரல்லாத மக்களை ஒன்றிணைத்த வர், சமூகத்தில் நிலவிவந்த ஜாதிபேதம், சமூகக் கொடுமை பெண்ணடிமை போன்றவற்றை துணிந்து நின்று எதிர்த்தார். அக் காலகட்டத்தில் ஜாதிய வாதம் வேர்விட்டு தனது கொடிய நச்சுக்கிளைகளை பரப்பிய வேளையில் பெரியாரின் பணி துவங் கியது.
சுயமரியாதை என்னும் ஆயுதம்  பெரியாரின் முதல் வேலை நச்சுக்கிளை களைப் பரப்பிவந்த வர் ணாஸ்ரம ஜாதிபேத மரத்தின் வேரை வெட்டி எரித்துப் பொசுக்கவேண் டிய கட்டாயமிருந்தது. அது அவ்வளவு எளிதான வேலையில்லை, தனது வீட்டில் இருந்து ஆரம் பித்து தனது ஊர் நகரம் மாவட்டம் என நீண்ட பெரும் போராட்டத்தை சந்திக்கவேண்டி இருந்தது. பெரியார் சுயமரியாதை என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தார்; அவர் கூறினார் ஒருவன் தனக்கு எவ்வளவு மரியாதையை எதிர்பார்க்கிறானோ அதையே மற்றவருக்கும் கொடுக்கவேண்டும் என்று நினைக்க வேண் டும். சுயமரியாதை இயக் கம் ஒரு புரட்சிகர இயக்க மாகும், சமூக நீதி என்பது உட்கார்ந்து தன்னுடைய எஜமானர்களிடம் கெஞ் சிப் பேசி பெறும் ஊதியம் கிடையாது, புரட்சியால் மலரவேண்டிய மாற்றம் என்று பெரியார் கூறினார்.
மேலும் அவர் கூறிய தாவது, உலகில் திருத்த முடியாதவை மிகச்சிலவே அதில் முக்கியமானவை பார்ப்பன சித்தாந்தம் _ அவர்கள் கொடுத்த இந்து மதம் என்று அடித்துக் கூறினார்.

உண்மையைச் சொல்ல அவர் எந்த இடத்திலும் தயங்க வில்லை, அதே நேரத்தில் தான் கூறியதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கூறினார். அரசியல் விழிப்புணர்வு 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்ததில் இந்தியா முழுவதும் அரசியல் விழிப்புணர்பு, சமுக நீதிப் போராட்டம், நிறைந்தி ருந்தது. எந்த இடத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக் கமே மேலோங்கி இருந் தது.
1870 முதல் 1900 வரை கல்லூரியில் படித்து வெளிவரும் மாணவர் களில் 80 விழுக்காடு பார்ப்பனர்களே இருந் தனர். மீதமுள்ளவர்களில் உயர் ஜாதியினர் ஆக்கிர மித்திருந்தனர். ஆனால்
இந்தியா முழுவதும் பெரியார் தேவை
1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் உதித்த பெரியார் என்னும் பகுத்தறிவுப் பகலவன் தன்னுடைய  மரணத்தின் சில நாட்கள் முன்கூட 94 வயதிலும் தன்னுடைய கொள்கைகளைப் பரப்புவதிலும் மக்களுக்காக வாழ்வதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டார். பெரியாருக்கு யுனஸ்கோ அமைப்பு 1970-ஆம் ஆண்டு தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தைக் கொடுத்து சிறப்பித்தது. பெரியார் போன்ற தலைவர்களின் கருத்துக் களால் இன்று இந்தியா சமூக நீதிக்களத்தில் முன்னேற்றம் பெற்று வீரநடைபோடுகிறது.  தற்போது இந்துத்துவக் கொள்கைகளைக் கொண்ட ஆட்சியாளர்களால் சமூக நீதிக்கு சிறிது பின்ன டைவு ஏற்படத் துவங்கியுள்ளது. இந்தக் கால கட்டத்தில் பெரியாரின் கருத்துக்களை மீண்டும் உயிரூட்டம் கொடுத்து இந்தியா முழுவதும் கொண்டு செல்லக் கடமைப் பட்டுள்ளோம்.
 
சுதந்திரப்போராட்டத்தில் பார்ப்பனர்களின் பங்கு 3 விழுக்காடு மாத்திரமே இருந்தது. 1912-ஆம் ஆண்டில் 55 விழுக்காடு துணை மாவட்ட ஆட்சியாளர்கள், 82 விழுக்காடு நீதிபதிகள், 72 விழுக்காடு நகர நிர்வாக அதிகாரிகள் பதவியில் பார்ப்பனர்களே நிறைந் திருந்தனர். ஆனால் சமூகத்தில் பார்ப்பனரல்லாதோர் மிகவும் அதிகமாக இருந்தனர். அதேபோல் 80 விழுக்காடு பார்ப்பனர்கள் ஆங்கிலவழிக் கல்விகற்று ஆங்கிலேயே அரசாங்கத்தில் பெரும்பான்மையான பதவிகளைப் பெற்றிருந்தனர். இந்த நேரத்தில் பெரியார் தனது இயக்கத்தின் மூலம் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் கல்வி முதல் எல்லாப் பதவியிலும் இட ஒதுக்கீடு வேண்டுமென்ற போராட்டத்தில் இறங்கினார். போராட்டத்தின் அதிர்வு ஆங்கிலேய அரசாங்கத்தை அசைத்துப் பார்த்தது. இதன் விளைவாக 1928-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் (தற்போது தமிழ்நாடு, ஆந்திரா,தெற்கு கர்னாடகா, கேரளா அடங்கிய பகுதி) இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது. இந்தியாவில் முதல்முதலாக சமூகநீதிக்கான ஒரு போராட்டம் வெற்றிப் பாதையை திறந்து வைத்தது. பெரியாரால் திறந்து வைக்கப்பட்ட இந்த வெற்றிப் பாதை!
பெரியாரால் திறந்துவைக்கப்பட்ட இந்த வெற்றிப்பாதையில் வீரநடைபோட்டு பார்ப் பனரல்லாதமக்கள் ஒன்றுதிரண்டு தங்கள் உரிமைக்காக பெரியார் தலைமையில் போராட ஆரம்பித்தனர். இதன் விளைவாக இந்தியாவெங்கும் சமூகநீதிக்கான போராட்டம் பற்றிக் கொண்டது, அரசுகள் வேறு வழியின்றி பிற்படுத்தப்பட்ட, மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வகுக்கமுன்வந்தது.
பெரியார் எந்த ஒரு இடத்திலும் தம்மக்களுக்கான உரிமையை மீட்டுத்தர பின்வாங்கியதில்லை, பெரியார் தீவிர கடவுள் மறுப்பாளர், தான் கடவுள் மறுப்பாளராக இருப்பினும் கோவில்களில் பூசைசெய்யும் உரிமையை பார்ப்பனர்கள் மட்டும் வைத்திருப்பதை கடுமையாக எதிர்த்தார். பார்ப்பனரல்லாதவர்களும் கருவறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமைக்காக இறுதிமூச்சுவரை போராடினார்.
இந்துமதத்தில் உள்ள வேதங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவை தான் ஜாதிபேதமுறையை பரப்பும் முக்கிய கருவிகள் என்பதை அறிந்துகொண்ட பெரியார் அந்த புராணப்புரட்டு நூல்களில் புதைந்துள்ள மோசடிகளை மக்களிடையே கொண்டு சென்றார். பெரியார் மற்றும் திராவிடர் கழகம் இந்த நூல்களில் மறைந்துள்ள பிரிவினைவாதக் கருத்துக் களை சாமானியமக்கள் வரை கொண்டு சேர்த்தனர்.  மக்களிடையே ஏற்படுத்தும் ராமாயணப்புரட்டு என்ற நூலையே திராவிடர்கழகம் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியது. பெரியார் ஆரியர் களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போராட்டமே ராமாயண கதையாக மாற்றப்பட்டது என்று அடித்துக் கூறினார். பிற்காலத்தில் பல்வேறு ஆய்வுகளின் மூலம் பெரியாரின் கூற்று உண்மையாக நிரூபிக்கப்பட்டது.
ராவண காவியம்
ராவணனே ராமாயண நாயகன் என்று திராவிடர் கழகம் மக்களிடையே கொண்டு சென்றது; இதற்காக பல நூல்கள் வெளிவந்தன. அதில் ராவண காவியம் என்ற நூலும் முக்கியமானதாகும். திராவிடர் கழகம் குறித்து ஆய்வு செய்த எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கூறும் போது திராவிடர் கழகம் ராவணனை திராவிடர்களின் நாயகனாக மக்களிடையே சித்தரித்தது. ஆரியர்களால் மறைத்து எழுதப்பட்ட ராவணனின் உண்மையான குணநலன்களை ராவணகாவியத்தில் வெளிக் கொணர்ந்திருந்தது, அதே போல் ராமனின் அயோக்கியத்தனத்தையும் மக்களிடையே பரப்பினர். (புலவர் குழந்தையால் எழுதப்பட்டது இராவண காவியம்). பெரியார் மூடத்தனம், மதத்தின் பெயரால் நடைபெறும் மூடநம்பிக்கை செயல்கள் மற்றும் மதநம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தார்.
அதே நேரத்தில் நவீன அறிவியல் குறித்து ஆர்வத்துடன் பல்வேறு கருத்துக்களை மக்களிடையே வைத்தார். மக்களின் உழைப்பால் வந்த பணத்தை மத நம்பிக்கையின் பெயரால் வீணாக்குவதை கடுமையாக எதிர்த்தார். பெரியார் தனது கருத்துக்களை சாமான்ய மக்களிடையே எளிமையாகக் கொண்டுசேர்க்கும் வகையில் தமிழ் மொழி நடையை எளிமையாக்கினார்.    சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது, பெரியாரின் கனவை நனவாக்கினார்கள். அண்ணாதுரை மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றினார்.
பெரியாரின் சிந்தனையில் எழுந்த புரட்சிகர திருமணமான சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக இயற்றினார். கலைஞர் கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைச் சட்டமாக்கினார்.
பெண் விடுதலையும் பெரியாரும்
பெரியார் ஆயிரம் நூற்றாண்டுகளாக சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளை களையத்தவறவில்லை. கற்பு புனிதம் போன்றவைகளின் பெயர்களால் பெண்களை அடிமைப்படுத்தும் முறையைக் கடுமையாக எதிர்த்தார். கற்பு புனிதம் என்பது பெண்களுக்கு மட்டும் என்று எப்படி சொல்ல முடியும் என்று  பெண்ணடிமைத்தனத்தை ஆண்டாண்டு காலமாக வைத்திருக்க காரணமே இந்த கற்பு புனிதம் போன்றவை தான் என்று கூறினார்.
ஆண்களுக்கு இணையாக பெண்களும் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். கல்வி, வேலை போன்றவற்றில் ஆண்களோடு பெண்களும் சரி சமமாக இருக்கவேண்டும் என்று கூறினார். திராவிடர்கழகம் பெண்ணடிமைகளை ஒழிக்க பெரும் போராட்டமே சமூகத்தில் நடத்தியது அதன் பலனை இன்று தென்னகத்துப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாதா சாவித்திரிபாய் புலேவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பெரியார் அவர் செய்ய மறந்த பல்வேறு பெண்ணுரிமைப் புரட்சிகளை தமிழக மண்ணில் நடத்திக் காட்டினார்.
தந்தை பெரியாரின் தன்னுடைய போராட்டங்களின் பலனை தனது கண்ணால் கண்டு மகிழ்ந்தார் பெரியார் போன்று உலகில் மிகச்சில தலைவர்களே உண்டு, பெரியார் தன்னுடைய கொள்கையில் எந்த அளவிலும் பிசகாமல் தன்னுடைய புரட்சிப் பயணத்தை தொடர்ந்தார். - சத்ய சாகர், சமூக சேவகர், பத்திரிகையாளர்,  தலைநகர் டில்லியில் இருந்து வெளிவரும் பார்வேர்ட் பிரஸ் என்ற இருமொழி மாத இதழின் ஜூன் பதிப்பில் எழுதியது

 -விடுதலை,12.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக