வெள்ளி, 11 அக்டோபர், 2019

கடந்த 1500 ஆண்டுகளில் எவருக்கும் கிடைக்காத மரியாதை பெரியாருக்கு கிடைத்தது



சமூக நீதியின் பால் அவருக்கு இருந்த மாறாத ஈடுபாடு, உண்மையின் பக்கம் உறுதியுடன் நிற்கும் அவரது மனவலிமை, அனைத்திற்கும் மேலாக இரங்கத்தக்க நிலையிலிருந்த கோடிக் கணக்கான தாழ்த்தப்பட்ட இந்திய மக்களின் நலனுக்காக அவர் ஆற்றிய பணி ஆகியவற்றிற்காகத் தமிழ் மக்களால் அன்புடனும் பாசத்துடனும் பெரியார் என்றழைக்கப் பட்டார். அவர் இறப்ப தற்குச் சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற மாநாட்டின்போது தனது ஆதரவாளர்களிடம் "மத நடவடிக்கை களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் அர சியல் சட்டப் பிரிவை மத்திய அரசு உடனடியாக நீக்காவிடில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி இருபத்தியாறாம் தேதி,  'செய் அல்லது செத்து மடி' என்ற போராட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்தார். ஆனால் அத்திட்டத்தை நிறைவேற்ற அவர் உயிருடன் இருக்க வில்லை .

பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தவாதி. சிலை வழிபாட்டு எதிர்ப்பாளர். காங்கிரசின் முதல் எதிரி. திராவிட அரசியலில் எப்பொழுதும் பேசப்படுபவராக இருந்தார். அனைத்துப் பொது மக்களிடமும் நன் மதிப்புப் பெற்றிருந்தார். பல்வேறுபட்ட அரசியல் கருத்துடையவர்களும் அவரைப் பாராட்டினார்கள். குடியரசுத் தலைவர் கிரி கூறினார். மக்களை ஈர்க்கும் தலைவர், வாழ்நாள் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டவர். பிரதமர் இந்திராகாந்தி கூறினார், "சர்ச்சைகளுக்கு உள்ளானவர். ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு எதிராகப் போராடியவர்.

மிக உயர்ந்த மதிப்புடன் தொண்ணூற்று அய்ந்து வயது வரை வாழ்ந்த பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்தி நான்காம் தேதி இறந்தார். தமிழ்நாடு முழுவதும் இருள் சூழ்ந்தது. முழு அடைப்பு வெகு இயல்பாகத் தானே நடந்தது. மாநிலம் முழுவதும் துயரத்தில் மூழ்கியது. தலைவர் பிரிந்து போய்விட்டதை எண்ணி நூற்றுக்கணக்கானோர் மாளாத்துயரில், அழுது புரண்டனர். சென்னை நகருக்குக் கொண்டு வரப்பட்ட அவரது உடல் இராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் இறுதி மரியாதை செலுத்துவ தற்காக வைக்கப்பட்டது. மாநிலஅரசு இரண்டு  நாள்  துக்கம் கொண்டாடியது. அனைத்து அரசு அலுவலகங்களும் கல்வி நிலையங் களும் அடைக்கப் பட்டன. டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி காவல் துறை யினரின் முழு மரியா தையுடன் இறுதி ஊர் வலம் நடைபெற்றது. பெரியாருக்குக் கிடைத்ததைப் போன்ற உயர்ந்த மரியாதை இந்தியாவில், கடந்த 1500  ஆண்டுகளில் இந்து மத எதிர்ப்பாளராக வும் இறைமறுப்பாளராகவும் விளங்கிய வேறு எவருக்கும் கிடைத்ததே இல்லை.

பகுத்தறிவுச் சிந்தனையும் மதச்சார்பற்ற நடை முறையும் வளர்ச்சியடைவதற்காக அவர் ஆற்றிய பணியைப் போற்றும் விதமாக தமிழ்நாட்டின் பல நகரங்களில் அவரது முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அச்சிலைகளின் தளத்திலுள்ள கற்பலகைகளில் அவருடைய கருத்துகள் எழுதப்பட்டிருக்கின்றன. "கடவுள் இல்லை; இல்லவே இல்லை; கடவுளை 'கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி. சிலை திறப்பு விழாக் களில் தமிழ்நாடு அரசு அமைச்சர்களும் எண்ணற்ற அறிவுஜீவி களும் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் களிப்புடன் ஆரவாரித்தனர்.

தனது காலத்திற்குப் பின்னரும் மதத்திற்கெதிராகவும் சமூக அநீதிக்கெதிராகவும் இயக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காகப் பெரியார் அறக் கட்டளை ஒன்றை நிறுவினார்.

பிரேம்நாத் பசாஸ் எழுதிய "இந்திய வரலாற்றில் பகவத் கீதை", பக்கம் 887-888

- விடுதலை ஞாயிறு மலர், 14. 9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக