வெள்ளி, 25 அக்டோபர், 2019

பெரியார் போராட்டப் பாதையில் நான்



அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக் கொண்டால், நாட்டினுடைய விழிப்பிற்கு 50 ஆண்டுகள் - அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு 50 ஆண்டுகள் - என்ற அளவில் ஒரு பகுத்தறிவு மனப்பான்மை யைத் தோற்றுவிப்பதற்காக ஒரு வால் டேர், ஒரு ரூஸோ இப்படித் தொடர்ச்சி யாகப் பலர் வந்து இரண்டு மூன்று நூற்றாண்டுகள் பாடுபட்டுத்தான் பகுத்த றிவுப் பாதையில் அந்த நாடுகள் செல்ல முடிந்தன. இப்படி இரண்டு நூற்றாண்டு களில் செய்யவேண் டிய காரியங்களைப் பெரியார் அவர்கள் இருபதே ஆண்டு களில் செய்து முடிக்க வேண்டுமெனக் கிளம்பினார்கள்; திட்டமிட்டார்கள்; அந்தத் திட்டத்தின் அடிப்படையில் பணி யாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஆங்கி லத்தில் சொல்லுவார்கள், “றிuttவீஸீரீ நீமீஸீtuக்ஷீவீமீs வீஸீ tஷீ நீணீஜீsuறீமீs” என்று சில மருந்துகளை உள்ளடக்கிச் சில மாத் திரை களிலே தருவதுபோல, பல நூற்றாண் டுகளை இருபது ஆண்டுகளில் அடைத்து அவர்கள் தம்முடைய வாழ்நாளிலேயே சாதித்துத் தீரவேண்டுமென்று அறிவோ டும், உணர்ச்சியோடும், நெஞ்சின் ஊக்கத் தோடும் யார் வருகிறார்கள், யார் போகி றார்கள் - என்பதைக்கூட இரண்டாந் தரமாக வைத்துக்கொண்டு - எந்த அளவு முன் னேறுகிறோம் என்பதைக் காண்பதி லேயே அவர்கள் வாழ்க்கை முழுவதும் போராட் டக்களத்தில் நின்றிருக்கிறார்கள்.

அந்தப் போராட்டக் களத்தில் பெரியார் அவர்கள் நின்றிருந்த நேரத்தில், சில பகுதி களில் நான் உடனிருந்து பணியாற்ற வாய்ப் புக் கிடைத்தமைக்காக மகிழ்ச்சியடைகி றேன். நான் கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் முதலில் அவர்களிடத்தில்தான் சிக்கிக்கொண் டேன். நான் சிக்கிக்கொண் டது வாலிபப் பருவத்தில்! எங்கெங்கோ போய்ச் சிக்கிக் கொண்டிருக்க வேண்டி யவன், அவர்களி டத்தில் தான் முதன் முதலில் சிக்கிக் கொண்டேன். நான் காஞ்சிபுரத்தில் கல்லூரியில் படித்த படிப்பையும், அதன் மூலம் என்னென்ன எண்ணங்கள் ஏற்படுமோ அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, ஈரோட்டில் போய்க் குடி யேறினேன்.

எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இதுபற்றி என்னுடைய பாட்டியார் அப் போது அவரை ஒத்த மூதாட்டிகளோடு பேசும்போது அடிக்கடி சொல்லுவார்கள். ஆறுமாதம், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காஞ்சிக்குச் செல்கிற நேரங்களில் அவர்கள் என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல் லும்போது, “யாரோ ஈரோட்டிலிருந்து வந்த ஒருவன் என்னுடைய பிள்ளையைப் பிடித்துக்கொண்டு போய்விட்டான்” என்று பேசுவார்கள். அவர்களே ஒரு தடவை காஞ்சிபுரத்தில் ஆடிசன் பேட்டையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பெரியார் அவர்களுடைய பேச்சைக் கேட்டபிறகு சொன்னார்கள் - என்னைப் பார்த்து, “நீ ஈரோட்டிலேயே இரு” என்று. இத்தனைக்கும் அவர்களுக்கு அதிகமாகப் படிப்பு அறிவு இல்லை .

எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால், தொடக்கத்தில் அவர்களிடத்தில் இருந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்சிகள் பலப்பல இருக்கின்றன; என்னுடைய வாழ்நாள் முழுவதும் எண்ணி எண்ணி மகிழத்தக்கவை அவை. இப்போது எனக்கு கிடைக்கக் கூடியது என்று எந்தப் பட்டிய லைக் காட்டினாலும் நான் ஏற்கெனவே பெற்றிருந் ததைவிட இவை யெதுவும் மகிழ் ச்சியிலோ பெருமை யிலோ நிச்சயமாக அதிகமானதாக இருக்க முடியாது.

- அறிஞர் அண்ணா

- - - - -

திராவிடத்தின் விடிவெள்ளி!

ஆம்! தென்னகம், திராவிடம் என்பது நிலைநாட்டப்பட்ட, சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் பெற, இந்தித் திணிப்பும், ஆதிக்கமும் ஓரளவில் நிறுத் தப்பட, திருக்கோயில் ஆண்டவர்கட்குத் தமிழும் ஏற்புடையதாக்கப்பட, புரோகித ஆதிக்கச் சட்டம் நொறுங்கிப்போக, நமை ஈன்ற தமிழ் செம்மொழித் தகுதி பெறுவதற்கான அடிப்படை, அமையப் பலவழியிலும் போராடும் துணிவைத் தந்தவர் திராவிடத்தின் விடிவெள்ளி தந்தை பெரியார் அன்றோ!

பெரியார் மட்டும் தோன்றியிராவிடில்....

நாமெல்லாம் எண்ணத்தால் எலியாக, முயலாக அல்லவா இருந்திருப்போம்!

புழுவாக, பூச்சியாக, புன்மைத் தேரை யாக அல்லவா எண்ணப்பட்டிருப்போம்!

இழிகழுதையாக, ஏரினில் கட்டிய மாடுகளாக அல்லவா நடத்தப்பட்டிருப் போம்!

நரியாக, பன்றியாக நடத்தினாலும் ஏன் என்று கேட்கும் துணிவின்றியல்லவா கிடந்திருப்போம்! ஜீனீ

இந்த நாட்டில் நாம் அந்நிய (ஆங்கி லேய) ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றோமென்றாலும், உள்நாட்டிலேயே தயாரான வைதிகக் கைவிலங்கு உடைக் கப்படாத நிலையிலும், மத மயக்க மருந்து தெளியாத நிலையிலும், சுயநினைவும், அறிவின் செயற்பாடும் இழந்த நடைப் பிணங்களாக அன்றோ உலவி இருப் போம்?

ஜாதிப் பித்தம் தெளிய மாமருந்து!

இந்த உண்மையை எண்ணிப்பார்க்கும் ஒரு கணம் எவரும் துணுக்குறாமல் இரார்! ஆம். அந்த இழிநிலையை மாற்றுவதற்கு - ஜாதிப்பித்தம் தெளிவதற்கு மாமருந்து கண்டவர்தான் தந்தை பெரியார். அத னால்தான் அண்ணா சொன்னார், “திராவி டத்தின் வாழ்வில் தந்தை பெரியார் ஒரு சகாப்தம்” என்று. அஞ்சா நெஞ்சமும், குழப்பமற்ற தெளிவும், அசையாத துணிச் சலும், அயராத உழைப்பும், எதையும் வரையறுத்துச் சிந்திக்கும் கூர்த்த மதியும், ஓயாது எண்ணி , நாளும் எழுதியும், பேசியும், பாடுபடும் ஆர்வம் வாய்ந்த பெரியாருக்கு ஈடும், இணையும் அவரே யன்றோ! தமிழ் மண்ணில் அவர் தோன்றா ததொரு நிலை அமைந்திருப்பின் அது எண்ணிப் பார்க்கவும் இயலாத இருள் நிலை அன்றோ!

- பேராசிரியர் க.அன்பழகன்,

நூல்: 'இவர்தாம் பெரியார்'

- - - - -

இது சுதந்திரத்தால் ஆகாது சுயமரியாதையால் தான் ஆகும்

தமிழர்களின் ஈராயிரமாண்டுச் சமு தாய வரலாற்றில் அங்கொன்றும் இங் கொன்று மாய் அறச்சீற்றங்கள் பதிவான துண்டு. “இரந்தும் உயிர் வாழ்தல் வேண் டின் பரந்து கெடுக உலகியற்றியான்” என்ற வள்ளுவர் குறள் வெறும் இலக் கியச்சினமாகவே வடிந்துவிட்டது.

“பறைச்சியாவ தேதடா?

பனத்தியாவ தேதடா?

இறைச்சி, தோல், எலும்பினுள் இலக்க மிட்டிருக்குதோ”

என்ற சிவவாக்கியம் வெறும் ஆன் மிகக் கோபமாகவே அடங்கிவிட்டது.

இவைபோன்ற கவிதைச்சினங்க ளெல்லாம் இலைகளின் மீது பூச்சிமருந்து தெளித்தனவே தவிர, வேர்ப்புழுக்களைச் சென்று விசாரிக்கவேயில்லை. அந்த வகை யில் தமிழ்ப் பெரும்பரப்பில் அநீதி யின் ஆணிவேர்களை அசைத்ததும் சமுகக் கேடுகளின் அடிவேர்களைக் கெல்லியதும் வருணாசிரமத்தின் கிளை களை வகிர்ந்ததும் பெரியாரின் பெருங் கோபம் மட்டும் தான்.

ஒரு மனிதன் கைநீட்டிப் பேசுகிறான்; ஒரு மனிதன் கைகட்டிப் பேசுகிறான். உற்றுப்பார்த்தால் ஒருவன் “பிராமணன்” இன்னொருவன் “சூத்திரன்”.

மாடத்தில் ஒருவனுக்குக் காலுக்கும் தலையணை. மண்குடிசையில் ஒருவனுக் குக் கையே தலையணை. உற்றுப்பார்த் தால் ஒருவன் செல்வந்தன்; இன்னொ ருவன் வறியவன். ஒருவன் அழுக்குப் படாமல் பொரு ளீட்டுகிறான்; இன்னொரு வன் புழுதியிலும் சகதியிலும் பொருள் தேடுகிறான். உற்றுப் பார்த்தால் ஒருவன் கற்றவன்; இன்னொ ருவன் கல்லாதவன்.

ஓர் உடல் கட்டற்ற சுதந்திரத்தை அனு பவிக்கிறது. இன்னோர் உடல் கட்டுண்டு கிடக்கிறது. உற்றுப்பார்த்தால் ஓர் உடல் ஆண்; இன்னோர் உடல் பெண்.

“பிராமணன் - சூத்திரன்”, “ஏழை - பணக்காரன்”, “கற்றவன் - கல்லாதவன்”, “ஆண் - பெண்” ஆகிய பேதங்களே மனித குலத்தின் முற்போக்குக்கும் முன் னேற்றத் திற்கும் தடையாயின.  இவற்றைக் கட்டமைத்த - கட்டிக்காக்கிற எல்லா நிறுவனங்களையும் உடைப்பதுதான் என் ஒரே வேலை என்று பேராக்கம் கருதிப் பேரழிவு செய்யப் போந்தவர்தாம் பெரியார். இது சுதந்திரத் தால் ஆகாது சுயமரியாதையால்தான் ஆகும் என்ற தொரு முற்றிய முடிவெடுத்து அரசிய லைத் துறந்த ஒரு சமூகத் துறவிதான் பெரியார்.

- கவிப்பேரரசு வைரமுத்து,

'கருஞ்சூரியன்'

 -விடுதலை ஞாயிறு மலர் 19 10 19

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக