திங்கள், 14 அக்டோபர், 2019

நூற்றுக்கு நூறு உண்மையே இருக்க வேண்டும் என்று அறிவித்த பெரியார்

உண்மை என்றால் நூற்றுக்குநூறு உண்மை




நூற்றுக்கு நூறு உண்மையே இருக்க வேண்டும் என்று அறிவித்த பெரியார், அதை எவ்வளவு விழிப்பாகப் பின்பற்றி னார் என்பதைக் காட்டும் நிகழ்ச்சி இதோ:

1973ஆம் ஆண்டு ஜூன் திங்கள்; தந்தை பெரியார் திருச்சியில் தங்கியிருந்த நாள், வந்த பல பார்வையாளர்களில், டாக்டர் சற்குருதாஸ் ஒருவர். அவர், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வராக இருந்தவர்.

டாக்டர் தாசை, தமக்கே உரிய தனிப் பாசத்தோடு தந்தை பெரியார் வரவேற்றார். சில மணித்துளிகள் இருவர் நலம் பற்றி பேச்சு, பிறகு, டாக்டர் தாஸ், பெரியாரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தார். பெரியார் அதை நொடியில் படித்து முடித்தார். படித்து முடித் ததும், தாஸ் பெரியாரைப் பார்த்து, ‘அய்யா, இந்த பெண் என் மகள். மருத்துவக் கல் லூரிக்கு மனுப் போட்டிருக்கிறாள். அய்யா பார்த்து, சொல்ல வேண்டியவர்களிடம் ஒரு சொல் சொன்னால், அவளுக்கு இடம் கிடைத்துவிடும். அவள் எதிர்காலம் ஒளி மயமாகிவிடும். எங்களைப் போன்றவர் களுக்கு அய்யாவே அடைக்கலம்‘ என்று வேண்டிக் கொண்டார்.

அதற்கு ‘இந்த அம்மாள் வாங்கியிருக்கிற மதிப்பெண்ணுக்கு தானாகவே இடம் கிடைக்க வேண்டும். முந்தி வந்திருந்தால் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சொல்லி யிருக்கலாம்.’ ‘என் யோக்கியதைக்கு நான் சொல்கிற பரிந்துரைக்காக, ஆண்டுக்கு இரண்டொரு இடம் கொடுப்பார்கள். ஏற் கெனவே, அதற்கு மேல் சொல்லிவிட்டேன்.

இதையும் நான் சொல்லி, இவ்வளவு மதிப்பெண் பெற்றவருக்கு இடம் தவறி விடக் கூடாதே’ என்பதே என் கவலை. ‘நிறைய மதிப்பெண் இருப்பதால், வேறு எவர் வழியாகவாகிலும் ஒரு பரிந்துரை யைப் பெறுங்கள்; இடம் உறுதியாகக் கிடைக்கும்‘ என்று பெரியார் பதில் அளித் தார். நம்பிக்கையுடைய கிறுத்துவராகிய டாக்டர் சற்குருதாஸ், ‘அய்யா தங்கள் வாழ்த்து பலிப்பது உறுதி, எதற்கும் இச்சீட்டு தங்களிடமே இருக்கட்டும் என்று சொல்லி விட்டு, விடை பெற்றுக் கொண்டார். சில வாரங்களுக்குப் பிறகு, எங்கெங்கோ பயணம் செய்துவிட்டு, தொண்டு செய்து பழுத்த பழமாகிய பெரியார், திருச்சிக்குத் திரும்பினார். சிறிது நேரத்தில், டாக்டர் சற்குருதாஸ், திருமதி, செல்வி சற்குருதாஸ் ஆகிய மூவரும் பெரியார் மாளிகைக்குச் சென்றார்கள்; வெறுங் கையோடா? இல்லை.

பெரிய மாலையும் தட்டு நிறையப் பழங்களும் கொண்டு போனார்கள். பெரியாருக்குக் காணிக்கையாக்கினார்கள். பெரியார், இந்த அம்மாளுக்கு நான் பரிந் துரைக்கவில்லை. அவர்கள் வாங்கிய மதிப் பெண்ணே இடம் தேடித் தந்திருக்கும். இல்லையென்றால் வேறு எவரோ உதவி யிருக்கலாம். என்னாலே இடம் கிடைக்க வில்லை’ என்று, குழந்தைகளுக்கே இயல் பான தன்மையில் உண்மையை வெளி யிட்டார். ‘இருந்தால் என்ன அய்யா! அப் போதே சொன்னேனே அய்யா! தங்கள் வாழ்த்தே பலிக்குமென்று, தாங்கள் தானே எங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவு, பாதுகாவல், நம்பிக்கை, வாழ்வு.’ நெஞ்சுருகக் கூறினார், டாக்டர் சற்குருதாஸ்.

இந்நிகழ்ச்சியை 6.1.74 அன்று திருச்சி யில் நடந்த பெரியார் இரங்கல் பொதுக் கூட்டத்தில் குறிப்பிட்டார், டாக்டர் தாஸ். ‘மற்றவர்களைப் போல, அமுத்தலாக இருந் திருக்கவில்லை பெரியார். எப்படியோ கிடைத்த வெற்றிக்கு தான் பொறுப்பில்லை என்று நன்றி சொல்லும் எங்களிடமே சொல்லத் தேவையில்லை. உண்மை ; முழு உண்மையில் பெரியாருக்கு இருந்த பற் றல்லவா அவரை அப்படிச் சொல்லச் செய் தது? பெரியாரின் வாய்மையை, நிகழ்ச் சியை நினைக்குந் தோறும் உள்ளம் உருகு கிறது’ என்று உருக்கத்தோடு உரையாற் றினார். நேரில் கேட்ட என் போன்ற பல்லா யிரவர் கண்கள் குளமாயின.

- நெ.து.சுந்தரவடிவேலு

நூல்:  புரட்சியாளர் பெரியார்

அகவுணர்வு


வளர்ந்து வரும் பேறு


இராமசாமிப் பெரியார் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர்தம் புகழோ - தென்னாட்டிலும், வட நாட்டிலும், பிற * நாடுகளிலும் மண்டிக் கிடக்கின்றது! காரணம் என்ன? தோழர் ஈ.வெ.ரா.வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத்தொண்டாகும்.

ஈ.வெ.ரா.விடம் ஒரு வித இயற்கைக் கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவ ரது தொண்டு கனிந்தது. அஃதென்னை? அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை; மிகச் சிலர்க்கே வாய்க்கும். தமிழ்ப் பெரியார்

- திரு. வி. கல்யாண சுந்தரனார்

நூல்: தமிழர் தலைவர்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்!


பெரியார் இராமசாமி அவர்கள், திராவிடருக்குப் பொதுவாயும், தமிழருக்குச் சிறப்பாயும், உரிமையும், பெருமையும் உண்டு பண்ண உழைக்கும் பெருந்தலை வர்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் போலிப் பெரியார் வரிசையில் சேராதவர். எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய முயற்சியுடையார். கிளைபகை கருதாமல், பொதுநலமொன் றையே பேணித் தம் உள்ளத்தாற் பொய் யாதொழுகும் நேர்மையாளர். புகழும் பழியுமிகுந்து, அச்சமறியா உரனுடைய உள்ளத்தராய், என்றும் ஒன்றுபோல் நின்று, உற்றாரிடத்துக் குறை காணில் மறையா துரைத்து, வலியார் மெலியாரை நலியாது எதிர்த்தது. எளியவர் தோழராய்ப் போரா டும் வீரர், தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளருள், தலையணி நிலையுடைத்தக்கார். அவரோடு கருத்து வேறுபாடுடையாரும், அவர் நேர்மையும், பகையற்ற உளப்பாங் கும், அஞ்சாமையும், பாராட்டும் தகவுடை யார்.

- நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், எம்.ஏ.,பி.எல். (1942)

நூல்: தமிழர் தலைவர்

எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மை


இளமையில் இருந்தே நாணயம், நேரிய பார்வை, அறநெறி ஆகியவற்றை பின்பற்றி யவர் பெரியார். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மை (திரிகரணசுத்தி) என்பது அவருடைய ஆளுமையில் ஆழ மாகப் பொதிந்திருந்தது. எதிராளிகளின் மறுசெயல்களைப் பற்றிக் கவலைப்படாமல தமது கருத்துகளின் வெளிப்பாட்டிலும் செயற்பாடுகளிலும் தெளிவாக அவர் நடந்து கொண்டார்.

- நீதியரசர் பி.ஏஸ்.ஏ.சாமி,

ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம்

உண்மைக் களஞ்சியம்!


நம் பெரியார் அவர்கள் ஒரு மகாத்மா வல்ல. ஆனால், தாம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித்தரமானவை. ஆனால், அவர் பிடிவாதக்காரரல்ல. தம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக, அவர் பட்டினி கிடப்பதில்லை; சாகும்வரை உண்ணாவிரதமிருப்பதில்லை. நேர்மையான வழியிலேயே பாடுபடுவார். காங்கிரஸ்காரருக்கு வார்தா எப்படியோ, அப்படியே திராவிடருக்கு ஈரோடு. அவர் கள் வார்தா போவதுபோல, நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்!

- சர். ஏ.டி.பன்னீர்செல்வம்,

பார் அட் லா  (1938)

நூல்: தமிழர் தலைவர்

ஒவ்வொரு சொல்லும் உண்மையுணர்வோடு


வந்தது


பெரியாரது மனம், இதுபோது மிகவும் முக்கியமான சமுதாயத்துறையிலீடுபட் டிருக்கிறது. கோட்டயத்தில் நடைபெற்ற எஸ்.என்.டி.பி. மாநாட்டில் 10,000க்கும் அதிகப்பட்ட மக்கட்கு, இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு எளியதாகவும், நேரானதா கவுமிருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும், உண்மையுணர் வோடு வந்தது. மிக்க கவனத்துடன் மக்கள் கேட்டனர்.

- முன்னாள் உயர்நீதிமன்ற

நீதிபதி எம்.கோவிந்தன்

பரிசுத்தத் தன்மையில் உள்ள அளவு கடந்த நம்பிக்கை


தோழர் நாயக்கரின் கொள்கைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம்; அல்லது ஏற்றுக் கொள்ளாமலிருக்கலாம். ஆனால், அவர் முன்னிலையில் நீங்கள் இருக்கும் போது, தமது கொள்கையின் நேர்மையில் நம்பிக்கையுள்ள ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை மாத்திரம் உங்களால் மறுக்க முடியாது. அவரது சேவைகள் அனைத் திற்கும் ஊற்றுக் கண்ணாய் விளங்கும் அவரது திருத்தூதின் பரிசுத்தத் தன்மையில் உள்ள அளவு கடந்த நம்பிக்கையும் இது தான்.

பாரிஸ்டர். கே.பி. கேசவமேனன் (1939)

நூல்: தமிழர் தலைவர்

இரகசிய அறைகள்


கிடையவே கிடையாது


பெரியார் மறதியாகக்கூட பொய் சொன்னதில்லை. நான் யாருக்கு அஞ்ச வேண்டும்? ஏன் மறைத்துப் பேச வேண்டும் என்ற தன்மான உணர்வுகள் அவர் வாயி லிருந்து பொய்களை வரவிடுவதில்லை. பெரியாரின் இதயத்துக்குள் இரகசிய அறை கள் கிடையவே கிடையாது.

- கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன்

நூல்: பெரியார் ஈ.வெ.ரா

 - விடுதலை ஞாயிறு மலர், 21. 9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக