சனி, 13 அக்டோபர், 2018

புத்தகங்களின் காட்டில் முகத்தைத் தொலைத்தேன்



ஒன்பதாம் வகுப்புத் தேர்வில் ‘நான் விரும்பும் தலைவர்' என்ற கட்டுரை கேட்கப்பட்டு இருந்தது. நான் விரும்பும் தலைவராக தந்தை பெரியார் பற்றி எழுதினேன். அதன் தொடக்கம் இப்படி அமைந்திருந்தது.

"யாராலும் அப்படி வாழ முடியாது! வாழ்ந்ததாக வரலாறு இல்லை. தமிழகத்தின் நீண்ட வாழ்க்கையை உடைய தலைவர்.

வரலாற்று நிகழ்ச்சியாகவே நிரம்பியவர். வரலாறுகள் யாவும் போராட்டங்களாகவே கண்டவர். அறிவா... அது நாட்டுக்காக! உழைப்பா... அது மக்கள் முன்னேற்றத்துக்காக என்றிருந்தவர்.

கிழடு பட்டாலும் தளராத வலிய நெஞ்சு! கால் தளர்ந்தாலும் தளராத கருத்துத் தெளிவு! தாடி தான் நரைத்தது, சிந்தனை நரைத்ததில்லை. மருத்துவர்கள் கூறும் உணவுக் கட்டுப்பாடுகளே இல்லாதும் நீண்ட ஆயுள்! தளராத உடல்! தமிழகத்தின் உந்து சக்தி!

பரம்பரை அடிமைகளின் பாசமுள்ள தலைவன்! ஏழைகளின் காசில்லாத வக்கீல்!

நீதிமன்றங்கள் அவருக்கு விவாத மேடைகள்! குற்றவாளிக் கூண்டுகளோ அவருக்குக் ‘குளு குளு அறைகள்!' சிறைச்சாலைகள் அவருக்கு மருத்துவமனைகள்! மேடைகள் அவருடைய நூல் நிலையங்கள்! ஊர் சுற்றும் உழைப்பே அவருக்கு உற்சாகம்!

போராடுவதுதான் இந்த அரசரின் பொழுது போக்கு! சாதி என்பதே அவருக்குத் தையல் கிழியாத செருப்பு! தன்மானமே அவருக்குக் கைத்தடி! கடவுள் எதிர்ப்பே அவரின் கருப்புக் சட்டை! பண்பாடு அவரின் வெண் தாடி!

அவருடைய புன்சிரிப்பு எதிரிகளுக்குப் புகையும் எரிமலை! அறிவா.. அதற்குக் கூர்மையா... அதை அவரின் ஒளிமயமான கண்களில் அல்லவா காண வேண்டும்!

வீரமா... 'வெங்காயம்' என்று அவர் வெகுண்டு திட்டும்போது வெளிப்படும் நெருப்பல்லவா? இப்படி எழுதிக் கொண்டே போகலாம்! அதனால் தான் அவர் நான் விரும்பும் தலைவர்! - என்று எழுதி இருந்தேன். பதினான்கு வயதில் தந்தை பெரியார் குறித்த ஆழமான புரிதலுடன் நான் எழுதி இருக்கிறேன் என நினைத்து விடா தீர்கள். "அதனால்தான் அவர் நான் விரும்பும் தலைவர்' என்பது மட்டும்தான் எனக்குச் சொந்தமானது. மற்ற அனைத்து வரிகளுக்கும் சொந்தமானவர் பேராசிரியர் அ. அறிவொளி!

நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை, முகத்தில் தாடி, உடல் முழுக்க காவி வேட்டி என்ற உருவம் தான் அ.அறிவொளி என்றால் நினைவுக்கு வரும். பட்டிமன்றப் பேச்சாளராக உள்ளே நுழைந்து, ஆன்மிக சொற்பொழிவா ளராக மறைந்துபோன அவர், தனது தொடக்க காலத்தில் எழுதிய நூல்; 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும்!''

அன்பரசி வெளியீட்டகம், வடக்குத் தெரு, பொருள்வை, சிக்கல் என்ற முகவரியில் இருந்து 1979ஆம் ஆண்டு வெளியான இந்த நூல் அதன் பிறகு மறுபதிப்பு கண்டதாக நான் அறியவில்லை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராக அறிவொளி அப்போது இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். நிர்வாகத்துடன் அவர் நடத்திய உரிமைப் போராட்டத்தின் காரணமாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனது தந்தையாருக்கு நல்ல நண்பர். கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆண்டு விழாவில் ஆண்டுதோறும் பங்கெடுக்கும் முகங்களில் அறிவொளியும் ஒருவர். அந்த வகையில் அப்பா மூலமாக என் கைக்கு இந்தப் புத்தகம் வந்து சேர்ந்தது.

இந்தப் புத்தகத்தை நான் படித்தது எனது ஒன்பதாம் வகுப்பில். எட்டாம் வகுப்பில் படிக்கும்போது, திருச்சியில் இருந்து ஒரு மாணவன் புதிதாக வந்து எங்கள் இலக்குமி ஆலை மேனிலைப்பள்ளியில் சேர்ந்தான். அவன் பெயர்: கா.திருமாவளவன். 'திருமா'க்கள் பெயர் ஒற்றுமையால் ஒன்று சேர்ந்தார்கள். திருச்சி பேராசிரியர் க.நெடுஞ்செழியன் - சக்குபாய் ஆகியோரின் நெருங்கிய உறவினர் இவர். திராவிடர் கழகக் குடும்பம். திருச்சி அன்பில் தர்மலிங்கம் குடும்பத்துக்கும் நெருக்கமான வர்கள். திருமாவளவன் மூலமாக மூன்று புத்தகங்களைப் பெற்றேன். கடவுளர் கதைகள், சங்கராச்சாரி யார்?, இன்னொரு புத்தகம். இம்மூன்றும் தான் என்னுள் ஒரு விதமான திராவிட ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி யவை. அதுவும் 'கடவுளர் கதைகள்' என்ற நூல் புராண ஆபாசங்களை அம்பலப் படுத்தியது. சங்கராச்சாரியார் சமஸ்கிருதப் பற்றாளர், தமிழுக்கு விரோதி என்பது மட்டுமே அன்றைய எனது எதிர்ப்பின் புரிதல். இந்த அடித்தளத்தில் இருந்த எனக்கு, அறிவொளியின், 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும்' நூல் ஈர்ப்பானதாக இருந்தது. ஈர்ப்பின் முதல் காரணம், தலைப்பு.



அந்த வயதில் அதில் இருந்த பல விமர்சனங்கள், சொற்கள், தர்க்கங்கள் புரியவில்லை. ஆனால் அந்தப் புத்தகத்தின் அழகான மொழிநடை, வர்ணனை ஆகியவை பிடித்திருந்தன. பெரியாரை விமர்சிக்கிறது இந்நூல், ஆனால் அழகாக. பெரியாரை சில இடங்களில் நிராகரிக்கிறது இந்நூல், ஆனால் மரியாதையாக. அதனால் தான் இது பிடித்தமானதாக இருந்தது.

பெரியாரை விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவராக அன்று நான் நினைத்திருந்த காலம் அது. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட வராக நான் இன்று நினைக்கவில்லை. பெரியார் மட்டுமல்ல, எவரும் விமர் சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அப்படிக் கொண்டுபோய் இருத்தி விடுவது அவர்களுக்கே பெருமை சேர்க்காது. இன்னும் சொன்னால் அந்த மகுடத்தை அவர்களே விரும்பமாட்டார்கள்.

மார்க்ஸ், ‘அயோத்திதாசர், ம.வெ.சிங்கார வேலர், அம்பேத்கர், பெரியார் என்ற சிந்தனையாளர்கள் நேரடியாய் எழுதியதை, பேசியதைவிட மற்றவர்களுக்கு மறுப்பாய், எதிர்வினையாய் எழுதியது, பேசியது தான் அதிகம். அந்த வகையில் இந்த நூல் அன்று (1980களில்) பிடிக்காமல் இருந்தது. பின்னர் (2000ஆம் ஆண்டுகளில்) பிடித்தது. எது பிடித்தது, எது பிடிக்காமல் போகிறது என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபாடு இருக்கும். பெரியாரின் செயல்பாடுகளுக்கு மனோ தத்துவ இயல் அடிப்படையிலும், ராசி அடிப்படையிலும் செய்யப்பட்ட விமர்சனங் களை மட்டும் புறக்கணித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

பெரியார் சராசரி மனிதர் அல்ல. சராசரி தலைவரும் அல்ல. சராசரி தத்துவவாதியும் அல்ல. அதை அறிவொளி ஒப்புக் கொள்ளக் கூடியவராக இருந்துள்ளார். அதனால்தான் பெரியாரைப் பார்த்துப் பிரமித்துப் போய் நிற்கிறார். "பெரியார் சுயநலவாதியாகவோ, சூழ்ச்சி வஞ்சகம் உடையவராகவோ இளமை முதல் இருந்ததற்கான சாட்சி யங்கள் எங்குமே கிடைக்கவில்லை. இத னால் அவரிடம் பகைவரையும் மதிக்கும் பண்பாடு மிகுதியாக இருந்தது.

மேடையும் எழுது கோலும் அவருடைய உண்மையான இதயத்தைப் படம் பிடித்து விடவில்லை. அவரின் உண்மையான இதயம் அப்பழுக்கற்ற பண்பானது. (பக்.19)

உண்மைதான்! பெரியாரின் பேச்சுக்களின் மூலமாக அவர் எழுதிய கட்டுரைகளின் மூலமாக மட்டுமே பெரியாரை இனம் கண்டுவிட முடியாது. பேச்சும், எழுத்தும் கட்டுப்படுத்தப்பட்ட கருத்து வடிவங்களே. செயலும், நடத்தையுமே பரிபூரணமானது. வரிவானது. அத்தகைய செயல்கள், நடத் தைகள் கொண்ட பெரியாரின் பரிபூரண வாழ்க்கை வரலாறு இன்னமும் எழுதப்பட வில்லை . தானே எழுதிய சுயசரிதையில் சில நிகழ்வுகளைப் பெரியார் குறிப்பிடுவார். அதேபோல் ஏன் காங்கிரசை விட்டு வெளியேறினேன் என்பதை விளக்குவார், தன்னை நோக்கி அழைத்தது யார் என்று விவரிப்பார், 'மாட்டுக் கொட்டகையில் நடந்த மகத்தான விருந்து' என்றொரு கட்டுரை, தனது தாயாரைப்பற்றி எழுதியது, மனைவி நாகம்மாள் பற்றி எழுதியது - இது போன்ற தரவுகள் மூலமாகத்தான் பெரியாரின் உண்மையான இதயத்தை உணர முடியும். இது புரியாமல் எழுத்தில், பேச்சில் சில சொற்களை முன்னும் பின்னும் வெட்டி எடுத்துக் கொண்டு கட்டுரையாக்கும் விமர்சனப் புலிகள் மலிந்து போன இந்தக் காலத்தில் அறிவொளி வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.

தேர்தல் அரசியலில் இருந்து பெரியார் விலகி இருந்ததைத் தான் அவர் செய்த பெரும் தவறு என்கிறார் அறிவொளி. 29 பதவிகளை வகித்தவர் பெரியார். காந்தியாரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 29 பதவிகளையும் தூக்கி எறிந்தவர். இரண்டு முறை கவர்னர்கள் சந்தித்து, சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றபோது பெரியார் மறுத்தார்.

பதவிக்குப் போனவன் மனதில் பட்டதை பேச முடி யாது, வாக்கு, வாங்குவதற்காக மக்களுக்கு பிடித்ததைத் தான் பேச வேண்டும் என்ற பெரியார், பதவிக்குப் போனவர்கள் யோக்கியர்களாக இருக்க முடியாது என்றும் சொன்னார். உச்சகட்டமாக, 'நானோ, அம்பேத்கரோ கூட பதவிக்குப் போய் விட்டால் யோக்கியமாக இருக்க முடியாது' என்றார். அரசியலை பணநாயகம் என்றும் விமர்சித்தார். ஆனால் பெரியாரைப் போன்றவர்கள் அரசியலை விட்டு ஒதுங் கியதால் தான் அரசியல் பணமயமானது என்று திருப்பிப் போடுகிறார் அறிவாளி.

''கை சுத்தமானவர்களே ஆளமுடியு மென்ற காலத்தில் இவர் ஆட்சி செய்திருந்தால் அரசியல் சாக்கடைகள் சந்தனச் சந்தையாகியிருக்கக் கூடுமே?

இவரைப் போல் தியாகமே தலை மைக்குத் தேவையானதென்றால் முட்டாள் களும் படிப்பை விலைபேசும் பச்சோந்தி களும் போட்டியிடாமல் அரசியலை விட்டே விலகியிருப்பார்களே! நம்மி டையே ஒரு லெனின் பிறந்திருந்தார். அவர் ஆட்சியைப் பிடிக்கத் தவறியதால் 'பெரியார்' என்ற பெயரோடு முடிந்து போய்விட்டார்..." (பக். 73-76) என்கிறார் அறிவொளி. தேசிய விடுதலை அரசியலில் இருந்த காங்கிரஸ் தியாகிகளுக்கு இரட்டை யாட்சி முறை ஆட்சி அதிகாரத்தை சுவைக்க ஏற்பட்ட தவிப்பும் சமூக விடுதலை அரசியலில் இருந்த நீதிக் கட்சிப் பெரிய மனிதர்களில் சிலர் பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த சுயநலமும்தான் தேர்தல் அரசியலை பெரியார் புறக் கணிக்கக் காரணம். அதிகாரத்தில் இருந்து செய்ய முடிந்ததைவிட வெளியில் இருந்து மிரட்டிச் செய்ய வைப்பதே சரியானது, போதுமானது என்று பெரியார் நினைத்தி ருக்கிறார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக இந்திய அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டதும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அவரது இறுதிச் சாதனைச் சட்டமாக ஆக்கப் பட்டதும் தேர்தலில் நிற்காமலேயே பதவியில் உட்காராமலேயே பெரியார் நிகழ்த்திய சாதனைகள்.

பெரியாரின் போராட்டங்களைப் 1979 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் இது. நான் படித்தது 1984-85ஆம் ஆண்டு களில் இன்றளவும் பாதுகாக்கப்பட வேண்டியதாக  பார்த்துத் தான் அறிவொளி அதிகம் மலைத்திருப்பார்.

அவருடைய வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.

காற்றினால் சுழற்றப்படும் காற்றாடி, காற்றையே எதிர்க்கிறது. எதிர்ப்பதனா லேயே மதிக்கப்படுகிறது.

அப்படித்தான் ஒரு போராட்டத்தாலே தலைவரான இவர் பல போராட்டங் களைச் செய்தார். அது தான் அவரின் இயல்பாகி விட்டது. (பக். 115) என்பார். அறிவொளி. பெரியாரை அன்று பலரும் எதிர்க்கவும், மதிக்கவும், இன்று பலரும் எதிர்க்கவும் மதிக்கவும் அவரது போர்க் குணமே காரணம். அதனால்தான் இறுதியில் அறிவொளி...

"அவரை யார் வேண்டுமானாலும் குறை கூறலாம்!

அவரை யார் வேண்டுமானாலும் திறனாய்வு செய்யலாம்.

ஆனால் அவரை அவமதிப்பதை மட்டும் யாரும் ஒப்புக் கொள்ள முடியாது. ஏன்! அவரை மதிக்காமல் இருப்பது கூடத் தவறல்லவா? (பக். 124)இருக்கக் காரணம் கருத்தில் தெளிவும் அதன் மொழிநடையும். கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நமக்கு எதிரான கருத்துகளையும், 'சரிதானே' என்று மயக்கிவிடும் சொற்கோவைகள்.

கடந்த 30 ஆண்டு காலத்தில் பெரியார் குறித்த எத்தனையோ புத்தகங்களைப் வாசித்தாலும், பெரியாரின் எழுத்து களை புத்தகங்களாக படித்திருந்தாலும், குடி அரசு மற்றும் விடுதலை இதழ்களில் அவரது படைப்புகளை நேரடியாக வாசித்திருந் தாலும் முதலில் படித்த 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும் 'நூல் இன்று வரை நினைவில் இருந்து நிழலாடுவதாக இருக்கிறது. இப்படித் தரப்பட்ட தன்மை ஒரு சில நூல்களுக்குத் தான் இருக்கும்'.

இப்படி ஒரு புத்தகம் எழுதிவிட்டு அதை யாருக்குப் படைத்துள்ளார் தெரியுமா? இராஜாஜிக்கு!

பெரியார் இராஜாஜியை 'அன்பான எதிரி' என்பார். அறிவொளியும் அப்படித் தான்!

- நன்றி: ‘புதிய புத்தகம் பேசுது’ செப். 2018, ப. 24-27)

- விடுதலை ஞாயிறு மலர், 22.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக