வெள்ளி, 28 டிசம்பர், 2018

யந்திரங்கள் (1)

14.12.1930-  குடிஅரசிலிருந்து... மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி என்று நாம் கருதியிருந்த காலமும் அந்தப்படியே யந்திரங் களை எல்லாம் பிசாசு என்று பிரச்சாரம்  செய்த காலமும் உண்டு. மனிதனின் இயற்கை முற் போக்கினு டையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும், தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும் விரும்புகின்ற நிலையிலும் மக்களின் சரீர கஷ்டத்தை உணர்ந்து அதை குறைக்க  வேண்டும் என்கின்ற ஆசையில் முயற்சி கொண்ட போதும் எந்த மனிதனும் யந்தி ரத்தை வெறுக்க முடியவே முடியாது. அன்றியும் வரவேற்றே ஆக வேண்டும்.

ஏன் என்றால் மனித அறிவின் சுபாவ அனுபவத் தைக் கொண்டும் ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்க வழியை கண்டுபிடிப்பதே இயற் கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயா சையைக் குறைத்துக் கொள்ள ஆசைப் படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவ குணங்களும் யந்திரங்களைக் கண்டு பிடித்து கையாடித்தான் தீரும். ஆகவே அறிவும், ஆராய்ச் சியும் இல்லாத இடங்களில் தான் இயந்திரங்கள் அருமையாய் இருப்பதும் அலட் சியமாய் கருதுவதுமாய் இருக்குமே தவிர மற்ற இடங் களில் அதாவது அறிவு ஆராய்ச்சி முன்னேற்றமுள்ள இடங்களில் யந்திரத்தாண்டவமே அதிகமாயிருக்கும்.

வியாச ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டதாகிய மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி; யந்தி ரங்கள் பிசாசு என்று நாம் கருதியதாக குறிப்பிட்ட தானது அறிவும் ஆராய்ச்சியும் கூடாது என்கின்ற எண்ணத்தின் மீதோ இயற்கையோடு போராட வேண்டுமென்றோ அல்லது மனிதன் சரீரத்தால் கஷ்டப்பட்டு, இம்சைப்பட்டுதான் ஆகவேண்டும் என்றோ கருதியல்ல. ஆனால்  மற்றெதைக் கருதி அவ்வபிப்பிராயம் கொண்டோம் என்றால் யந்தி ரங்கள் பலபேர், பலநாள் செய்யும் காரியத்தை வெகு சிலபேர் சில நாளில் செய்து விட்டால் மற்ற ஆள்களுக்கும் மற்ற நாள்களுக்கும் ஜீவனத்திற்கு கூலிக்கு மார்க்கம் எங்கே? அதன் மூலமாய் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு என்ன சமா தானம்? என்று சொன்னவர்களின் வார்த்தைகளை நம்பினதாலேயே தவிர வேறில்லை.

இந்தப்படியே இன்றும் இன்னும் அநேகர் நினைத்துக் கொண்டும், நம்பிக் கொண்டும் யந்திரங் களை ஆட்சேபித்து வெறுத்துப் பேசிக் கொண்டு மிருக்கின்றார்கள். ஆனால் இந்தப்படி எண்ணிக் கொண்டிருந்த நாம் அந்தக் காலத்திலும், இந்தப்படி இப்பொழுது எண்ணிக் கொண்டிருக்கின்ற அநேகர் இப்போதும் தங்கள் தங்களைப் பொறுத்தவரை தங்கள் தங்கள் காரியத்திற்கு மனித சரீர வேலை யை விட யந்திர வேலையையே விரும்பி அதை உபயோ கித்தே தான் வந்தோம். வந்தார்கள், வருகிறார்கள்.

உதாரணமாக, கால்கள் இருக்க கட்டை வண்டிகள் இருக்க (கட்டை வண்டியும் இயந்திரம் தான் இருந் தாலும்) இயந்திரத்தின் மூலமாகத் தான் அதாவது ரயிலில் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாய்தான் மோட்டாரில் பிரயாணம் செய்தோம். யந்திர மூல மாய்த் தான் கப்பலிலும் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாகவேதான் ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய்தோம். அதையே எல்லா மக்களுடைய போக்குவரத்து சாதனமாக ஆக்கவும் ஆசைப் படுகின்றோம். மற்றவர்களும் ஆசைப்படுகின்றார்கள். ஆகவே  இதை மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர இது எவ்வித குற்றமுள்ளதும் அநியாயமானதும் என்று சொல்லி இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும்.

ஆகவே யந்திரம் வேண்டாம் என்பது இயற்கை யோடும் முற்போக் கோடும் போராடும் ஒரு அறிவீனமான - பிற்போக்கான வேலையாகுமே தவிர மற்றபடி பயனுள்ள வேலையாகாது. உதாரணமாக 10 மூட்டைகளை ஒரு வண்டியில் ஏற்றி முன்னே நான்கு பேர் இழுத்துக் கொண்டும் பின்னே நான்கு பேர் தள்ளிக் கொண்டும் உடல் வேர்க்க நெஞ்சொடிய மணிக்கு மூன்று மைல் தள்ளாடித் தள்ளாடி இழுத்துக் கொண்டு போவதும், அதே மாதிரியான 25 மூட்டை களை ஒரு மோட்டார் லாரியில் ஏற்றி ஒரு மனிதன் நோகாமல் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதுபோல் உட்கார்ந்து கொண்டு சுக்கானை மாத்திரம் பிடித்துத் திருப்பிக் கொண்டு மணிக்கு 25 மைல் போவதுமான இரண்டு வேலைகளையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் சுயமரியாதைக்கு, ஜீவகாருண்யத்திற்கு - மனித சமுகத்திற்கு - முற்போக்கிற்கு மற்ற ஜீவன்களை விட மனிதனுக்குப் பகுத்தறிவு என்பதாக ஒரு குணம் அதிகமாக உண்டு என்கின்ற உயர் குணத்திற்கு எது ஏற்றது என்று கேட்கின்றோம்.

தொடரும்...

- விடுதலை நாளேடு, 28.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக