சனி, 29 டிசம்பர், 2018

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (3)

28.09.1930- குடிஅரசிலிருந்து...
சென்ற வாரத் தொடர்ச்சி...
அப்படிப்பட்ட பெண்கள்தான்; பெண்கள் நாயகம் என்று அழைக்கப்படத் தக்கவர்கள் ஆவதோடு பெண்கள் உலகத்திற்கும் பெரிய உபகாரம் செய்த வர்களாவார்கள். முக்கிய மாய் இதற்காக வேண்டியேதான் ஆத் மார்த்தம் தெய்வீகம் என்பவை களிலுள்ள புரட்டுகளை வெளியாக்கக் கட்டாயப் படுத்தப்படு கின்றோம். இது போலவே மண மகனும் தனக்குள்ள உணர்ச்சி, அவா, சுதந்திரம் ஆகிய காரியங்கள் எல்லாம் பெண் ணுக்கும் உண்டென்றும் தான் எவ்வளவு காரியம் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றோமோ அவ்வளவு காரியம் பெண்ணுக்கும் தன்னிடம் எதிர்பார்க்க முடியும் என்றும் கருதி அனு பவத்திலும் அதுபோலவே நடக்கவிட வேண் டும். தனக்கு அடிமைக் காக ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டோமென்கின்ற உணர்ச்சியை அடியோடு மறந்து விட வேண்டும்.
இந்த நாட்டில் பொதுவாக ஒழுக்கம் சீர்பட வேண்டுமானால் விபசாரம் என்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்க வேண்டு மானால் விதவைத் தன்மையும், ஆண்களுக்கு விபசார தோஷமில்லை என்கின்ற நடப் பையும் ஒழித்தாக வேண்டும். இவை ஒழிந்தால் உண்மையான காதலின்பமும், வாழ்க்கையில் திருப்தியும், சாந்தியும், ஒழுக்கமும் கட்டாயம் ஏற்பட்டுவிடும்.
ஆகவே மேற்கண்ட இரண்டு காரியங் களே பெரிதும் மனிதத் தன்மைக் கும், இயற்கை இன்ப நுகர்ச்சிக்கும் இடையூறாய் இருந்து வருகின்றது. பெண் களைப் பெற் றோர்களும் ஒருவிஷயத்தை முக்கியமாய் கவனிக்க வேண்டும்.
அதாவது பெண்களுக்கும் 16 வயது வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். மனித இயற்கைக்கு விரோதமாக ஆணுக்கு ஒருவிதமும், பெண்ணுக்கு ஒரு விதமுமாக அடக்கத்தையும் அடிமை உணர்ச்சியையும் கற்றுக் கொடுக்கக்கூடாது. பெண் ணின் தாய்மார்கள் பெண்களை அவர்களின் மாமியார்கள் வீட்டுக்கு அடிமைக்காக அனுப்புவ தாய்க் கருதி, அதற்குத் தயார் செய்யும் வழக்கத் தைவிட்டுவிட வேண்டும். எந்தப் பெண்களையும் தான் ஆண்களுக்குக் கீழ்பட்ட ஒரு பெண் என்றும், தனக்கு ஆண்களைவிட சில அடிமை குணங்களோ, அடக்கக்  குணங்களோ வேண்டுமென்று கருதும்படி கற்றுக் கொடுக்கக் கூடாது. அநேகமாய்த் தானே தனக்கு வேண்டிய காதலனைத் தெரிந்தெடுத்துக் கொள்ள பெண் களைப் பழக்கப்படுத்த வேண்டும். இம்மாதிரியாகப் பழக்கினோமானால் பெண் கள் உலகம் தலைசிறந்து சுதந்திரம் பெற்று உலகத்திற்குப் பெருத்த உதவியாக இருக்கும்.
இப்பொழுது பெரும்பான்மையான தெய் வீகத் திருமணங்கள் என்பது வெறும் அடிமைத் திருமண மாகவும் பிறர் இஷ்டத்திற்கே முழுபொறுப்பும் விடப்பட்ட தாகவும், நிர்ப்பந்தத்திற்கும், ஒரு கட்டுப் பாட்டிற்கும் கட்டிக் கொண்டு எப்படி இருந் தாலும் சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய தாகவும் இருக்கின்றது. ஆகையால் அந்த முறைகளும் ஒழிய வேண்டும்.
இன்றையதினம் ஒரு குழந்தையுடனுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணம் செய்து கொள்ள ஏற்பட்டதால் பலர் விதவையா னாலும் குழந்தை இல்லாத விதவை கிடைக்க வில்லையா என்று சொல்ல வந்து விட்டார்கள்.
இதற்கு முன் பக்குவமான சாந்தி முகூர்த்த மான விதவையைக் கலியாணம் செய்தபோது பக்குவமாகாத விதவை கிடைக்கவில்லையா என்றார்கள்.
வேறு ஜாதியில் ஒரு விதவையைக் கல்யாணம் செய்து கொண்டபோது நமது ஜாதியிலேயே ஒரு விதவை இல்லையா என்றார்கள். ஆதலால் இவ்விஷயங்களில் நாம் பொது ஜன அபிப் பிராயத்தைக் கண்டு பயப்படக்கூடாது. நல்ல வார்த்தையில் மிதமான வழியில் செய்யப்படும் முயற்சி கைகூடவே கூடாது.
ஏனென்றால் நமது மக்கள் பெரிதும் பாமர மக்களாகவே வைக்கப் பட்டிருக்கிறார்கள். அடிமை களுக்கு லட் சணமே ஒரு சிறு மூட்டையைத் தூக்கச் சொன்னாலும் முடியாது போ, உன் வேலையை பார் என்றுதான்  சொல்வார்கள். ஆனால் டவாலியைக் கழற்றி இரண்டு கொடுத்தால் பெரிய மூட்டையாய் இருந் தாலுங் கூட தூக்குவதற்குள் என்னய்யா அவசரம் என்பார்கள்.
ஆகையால் நாட்டைப் புதுப்பிக்க வேண்டு மானால் அமிதமான கொள் கையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப்போது ஒருபடி நமது பின்னாலேயே மக்கள் வந்து கொண்டி ருப்பார்கள் என்று பேசியவுடன் மணமக்கள் தங்கள் ஒப்பந்தம் சொல்லி மாலை மாற்றிய பின் திருமணம் முடிந்தது.
-விடுதலை நாளேடு, 29.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக