சனி, 29 டிசம்பர், 2018

உத்தரப்பிரதேசம் கான்பூரில் பெரியார் கொள்கைவழி நடந்தவர்களுக்கு "பெரியார் நெறியாளர் விருது!''

தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்
(விகேக் திவஸ் சமாரோஹ்)
பகுத்தறிவு தின விழா
மேலே கண்ட விருதின் தமிழாக்கம் அருகே காண்க.
திரு..........................................
பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு விழா அர்ஜக் சங்கத்தின் சார்பில் பகுத்தறிவு தினவிழாவாக கொண்டாடப்படுகிறது,
இந்த ஆண்டு கான்பூரில் 25 டிசம்பர் 2018 செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணி முதல் 3 மணிவரை  ஷிரம்சீல் புத்தவிகார் பஞ்சஷீல் கல்வி அறக்கட்டளை, பெரியார் சாலை, கான்பூர் ஜிஜக், கான்பூர் புறநகர், உத்தரப்பிரதேசம் -  இங்கு நடைபெற்றது,
இதில் பெரியார் ராமசாமி காட்டிய வழியில் நடந்தவர்கள், அவரது கொள்கைகளை பரப்புரை செய்தவர்கள் மற்றும் அவரது எழுத்துக்களை மக்களிடையே நூல்வாயிலாகக் கொண்டு சென்றவர்கள் என அனைவருக்கும் அர்ஜக் சங் - கான்பூர் கிளை மூலமாகவும், இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள், மனிதநேய செயல்பாட்டாளர்கள் மற்றும் பகுஜன் சார்பில் இந்த விருதை பணிவுடன் சமர்பிக்கிறோம்.
சுபோத் சிவ்நாத் சிங், கான்பூர் மாவட்ட தலைவர் அர்ஜக் சங்
புத்திஸ்ட் ராம்லகன் ஷிரம்சீல்
ஷிரம்ஷீல் புத்தவிகார்
கான்பூர், டிச.29 நாடு முழுவதும் தந்தை பெரியார் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் கடை பிடிக்கப்பட்டது. வட இந்தியாவில் செயல்பட்டுவரும் அர்ஜக் சங் அமைப்பின் கான்பூர் பிரிவு இந்த முறை அய்யாவின் வழியில் நின்றவர்களுக்கு, அய்யாவின் கொள்கைகளைப் பரப்புரை செய்பவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி  சான்றிதழுடன் நினைவுப் பரிசும் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு நடந்த விழாவில் 42 நபர்களுக்கு பெரியார் நெறியாளர் விருது(பெரியார் பெல்லோஷிப் அவார்ட்) வழங்கினார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் உண்மை இராமாயணம்' என்ற நூலை சச்சி இராமாயண்' என்ற தலைப்பில் பெரியார் லலாய் சிங் அவர்களுடன் இணைந்து இந்தியில் மொழி பெயர்த்து, அதற்குத் தடை வந்தபோது, வழக்காடிய பெரியார் ராம் ஆதார் அவர்களுக்கு புத்த துறவி ராம்லக்கன் ஷிரம்சீல் அவர்கள்  விருதை வழங்கினார்.
25.12.2018 ஆம் தேதி நடந்த விழாவில் மாயாவதி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த யஷ்காயி ராம் சுவரூப் வர்மா, யஷ்காயி பெரியார் லலாய் சிங், தலித் மித்ர லாலாஜி பால் ஷிக்ஷக், டி.சிறீகிருஷ்ண ராஜ்புத்,பெரியார் மோதிலால் கவுதம் பிரதான், அமோலி குர்மிவான், பாபூராம், சர்பஞ்ச் தமர்பூர், மோகன் லால் படேல் சகஜன்பூர்வாலா, பிரகாஷ் நாராயண் கட்டியார், பெரியார் ராம்னாத் சின்ன ராதாபூர், பெரியார் சிவகுமார் பாரதி சிக்கந்தரா, சீதாராமன் கடியார், பெரியார் ராமச்சந்திர கடியார், அவரது மகன் சீன் தயாள் போன்றோருக்கு பெரியார் நெறியாளர் விருதுகள் வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் கான்பூர், அலகாபாத்(பிரயாக்ராஜ்), இட்டா, லக்னோ, சமஸ்திபூர், ராம்புரா மற்றும் சுல்தான்பூர் போன்ற மாவட்ட அர்ஜக் சங் நிர்வாகிகள் பங்குகொண்டனர். மேலும் கான்பூர் பெரியார் நகர் பகுதி முனிசிபல் கவுன்சிலர் போன்றோர் பெரியார்பற்றி பல்வேறு சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கான்பூர் புறநகர் ஷிரம்சீல் புத்தவிகாரில் தலைமை துறவி மற்றும் ஷ்ரம்சீல் சமாஜ் உத்தான் சமிதி தலைவரும் சமூக சேவகருமான ராம்லக்கன் ஷிரம்சீல் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அர்ஜக் சங்கத்தின் கான்பூர் தலைவர் சிவநாத்சிங் சுபோத் கலந்துகொண்டு  விருதுகளை வழங்கி சிறப் பித்தார்.

விருது வழங்கும் விழாவிற்கான சுவரொட்டிகள் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தன
விழாவின் முக்கிய விருந்தினராக சிக்கந்தராபாத் சட்டப்பேரவை உறுப்பினரும் சமாஜ்வாடி சிக்கந்தரா பாத் மாவட்ட தலைவருமான புரபுத்த ஷிரம்சீல் மற்றும் கான்பூர் மாவட்ட பெரியார் கொள்கை வழியில் நடக்கும் அனைவரும் கலந்துகொண்டனர்.
- விடுதலை நாளேடு, 29.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக