வியாழன், 30 மே, 2019

அக்கிரகாரத்தின் சீற்றம்



தஞ்சை ஜில்லா திருவையாறு என்ற ஊரிலே. தஞ்சை மன்னன் மான்யத்தைப் பெற்று சமஸ்கிருத காலேஜ் ஒன்று நடந்து வருகிறது.

தஞ்சை ஜில்லா போர்டின் ஆட்சிக்கு உட்பட்ட காலேஜ், அங்கு சமஸ்கிருத போதனை மட்டுமே முன்னம் இருந்தது. - மறைந்த திராவிடமணி சர். பன்னீர் செல் வம் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது, அதிலே தமிழும் போதிக்க உத்தரவிட்டார்.

அக்கிரகாரம் சீறிற்று. அவர் அஞ்ச வில்லை, டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தோழர் நாடிமுத்துப் பிள்ளை, மேற்படி காலேஜி லுள்ள ஹாஸ்டலில். ஜாதி பேதம் கூடாது என்று கருதி, பிராமணரும் பிராமண ரல்லாதாரும் ஒன்றாகவே சாப்பிட வேண்டும் என்ற தீர்மானத்தை ஜில்லா போர்டு கூட்டத்திலே நிறைவேற்றினார். அந்த தீர்மானம் ஜனவரி 27ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஹாஸ்டலில், 70 பார்ப்பனரல்லாத மாணவர்களும், 45 பார்ப்பன மாணவர்களும் உள்ளனர். சமபந்தித் தீர்மானம் அமலுக்கு வந்ததும், இந்த 45 பார்ப்பன மாணவர்களும், ஜில்லா போர்டு தீர்மானத்தைக் கண்டித்து, ஹாஸ்டலில் சாப்பிட மறுத்துவிட்டனர். - அக்கிரகாரத்திலே சென்று சாப்பிட்டார்கள். பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாரும் சமமாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற உத்தரவைக் கண்டு அக்கிரகாரம் பதறுகிறது. உறுமுகிறது. இதன் கருத்து என்ன? - பார்ப்பனர் இன்றும் தமிழரைவிட மேலான ஜாதியார், தனியான ஜாதியார் என்ற திமிரான கருத்துடன் இருப்பதைத் தானே காட்டுகிறது?

-  தந்தை பெரியார் பேச்சு, விடுதலை 29.01.1941
- விடுதலை ஞாயிறு மலர், 25.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக