வெள்ளி, 31 மே, 2019

திராவிடம் இன்றேல், விடுதலை முற்போக்கு இல்லை (2)



10.01.1948  - குடிஅரசிலிருந்து..

சென்றவாரத் தொடர்ச்சி

சண்டாளன் என்கிறான். அந்த ப்படி எழுதி வைத்திருக்கும் புத் தகத்தைக் கடவுள் வாக்கு, சாஸ்திரம், மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதி என்கிறான்.

ஆரியருடன் கூட்டு வாழ்க் கைச் சரித்திரம் தெரிந்த காலம் முதல், ஆரியனுக்குத் திராவிடன் கீழ் ஜா தியானாகவும், சகல துறை களிலும் பாடுபட்டு உழைத்துப் போட வேண்டிய வனுமாகவே  இருந்து வந்திருக் கிறான்.

இப்படிப்பட்ட நிலைமையில் மானமற்ற சில திராவிடர்கள் - தங்கள் பிறப்பில் உறுதி யோ நம்பிக்கையோ அற்ற திராவிடர்கள், ஆரியனை மதகுருவாகவும், அரசியல் குரு வாகவும் கருதி அவன் பின்னால் திரிகிறார்கள் என்றால், இதைவிட ஒரு சமூகத்துக்கு வேறு மானக்கேடு என்ன என்று கேட்கிறேன்.

இந்தியாவில் திராவிடம், ஆரியவர்த்தம் என்ற பிரிவினை வெகு தெளிவாக இன்றும் இருக்கிறது. ஆதாரமும் இருக்கிறது.

அப்படியிருக்க திராவிட நாட்டை பரத நாடு என்று சொல்லவோ, பரதகண்டம் என்று சொல்லவோ, பாரத தேசம் என்று சொல்லவோ என்ன உரிமை இந்த ஆரியர்களுக்கு இருக்கிறது என்று கேட் கிறேன். அதுமாத்திரமல்லாமல், மானம் கெட்ட தமிழர்கள் பலர் அவர்கள் கூடச் சேர்ந்து கூப்பாடு போடுகிறார்களே, இவர்களுக்குத் தேசாபிமானமோ சுயமரியா தையோ தங்கள் பிறவியில் நம்பிக்கையோ இல்லையா என்று கேட்கிறேன்.

பரதன் திராவிட நாட்டை எப்போது ஆண்டான்? பரதன் என்பவனுடைய ஆட்சி திராவிடத்தில் எப்போதும் இருந்ததில்லை. திராவிட நாட்டைத் திராவிடர்களே ஆண்டிருக்கிறார்கள்.

முசுலிம் ஆட்சி கூட மிகச் சிறிது காலம் சில இடத்தில் இருந்தது என்பதல்லாமல், அதுவும் ஆரியர் குடியேறிய நாடுகளைப் பூரணமாக 1000க் கணக்கான வருஷங்களாக ஆண்டது போல் ஆண்டதாகச் சொல்ல முடியாது.

திராவிட மன்னர்கள் ஆட்சி வேண்டுமானால் ஆரிய நாடுகளிலும் இருந் திருக்கிறது.

ஆனால் ஆரியர் சூழ்ச்சியின் பயனாய் இந்த நாட்டை ஆண்ட பழம்பெரும் மன்னர் களின் சமுதாயங்களான திரா விடர்கள் ஆரியர்களுக்கு அடிமை ஜாதி யாகவும், கீழ்த்தர ஜாதியாகவும், தீண்டாத ஜாதியாகவும் ஆக்கப்பட்டுத் திராவிட நாட்டிற்கும் ஆரியர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டு விட்டன.

பாம்பு வாயில் தவளை


இன்று திராவிடம் பாம்பு வாயில் சிக்கிய தவளை விழுங்கப்படுவது போல், திராவிட சமுதாயம் அவர்களது கலை, மானம் ஆகிய வைகள் உட்பட ஆரியப் பாம்பால் விழுங்கப்படுகிறது. இப்போது தவளையாகிய திராவிடத்திற்கு கடைசி மூச்சு நடக்கிறது. அதன் அபயக் குரல் கேட்பது போல் பிரா ணாவதைக் கூப்பாடு போடுகிறது. இந்தச் சமயத்தில் பாம்பைத் துண்டித்து விட்டால் தான் திராவிடம் என்கின்ற தவளை பிழைக் கும். இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நேர (கால)த்திற்குள் தவளை (திராவிடம்) மறைந்தே போகும்.

இப்படிப்பட்ட நிலையில் அய்யோ பாம்பை வெட்டுவதா அடிப்பதா பாவம் என்று மடையனும் மானமற்ற வனும்தான் சொல்லுவான்.

இன்று திராவிடனுக்கு இந்த திராவிட நாட்டில் என்ன யோக்கியதை இருக்கிறது. ஆரியர்களையும் திராவிடர் களையும் ஒத்திட்டுப் பாருங்கள்.

ஆரியன் தெரு கூட்டு கிறானா? மூட்டை தூக்குகிறானா? வண்டி ஓட்டுகிறானா? பியூனாய் இருக்கிறானா? உழுகிறானா? அறுப்பு அறுக்கிறானா? சரீரத்தில் இருந்து ஒரு துளி வேர்வையோ, நகத்தில் கடுகத்தனை அழுக்கோ, படியும்படி ஏதாவது உடலு ழைப்புச் செய்கிறானா? ஆனால் அவன் வாழ்வையும் திராவிடன் வாழ்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

- விடுதலை நாளேடு 31 .5. 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக