புதன், 11 ஜனவரி, 2017

நீதிக்கட்சித் தலைவர்கள் பார்வையில் பெரியார்!

டாக்டர் டி.எம்.நாயர்



அன்னி பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக் கத்திற்குப் பல காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வருவதோடு, ஒரு சில திராவிடக் கருங் காலிகளும், கங்காணிகளும் விபீஷணர் களாக ஆகிப் பேராதரவு தந்து வரு கின்றனர். காங்கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி.வரதராசுலு நாயுடு, ஈரோடு இராமசாமி நாயக்கர், தூத்துக் குடி வழக்குரைஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சென்னைப் புலவர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன் றோரே, பார்ப்பனரல்லாதார் சமூகத் திற்குப் பாடுபடும் தலைவர்களாக இருந்து வருகின்றனர். மற்ற தேசியத் தலைவர்கள் எல்லோருமே பார்ப்பனர் கள்தாம். அவர்களால் நடத்தப்படும் செய்தித் தாள்களில் ஆசிரியர்களும், அவற்றின் நிருபர்களும் பார்ப்பனர் களே! அவர்கள் தங்களின் சுயநல அரசியல் செல்வாக்கையும், தலைமை யையும் வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களுடைய பொய், பித்தலாட்ட இந்து, சுதேசமித்திரன், பிரபஞ்சமித் திரன் போன்ற சாக்கடைச் செய்தித் தாள்கள் பெரிதும் உதவுகின்றன! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)
(புகழ்பெற்ற சென்னை ஸ்பர்டங் சாலை உரையிலிருந்து, 7.10.1917)

பனகல் அரசர்



தற்காலத்திய மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி திரு.இராமசாமி நாயக்கரே ஆவார். நமது மக்களின் நல னுக்காக அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் சிறை செல்வார். அவர் தமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பவர் ஆவார்.
(1928)

பொப்பிலி அரசர்



சுயமரியாதை இயக்கம் என்பது பல உன்னதமான கொள்கைகளைக் கொண்டது என்றே கூறு வேன். இந்து மதத்தை பெருமை அடை யச் செய்யக்கூடியதாகவும், பலம் பெறச் செய்யக் கூடியதாகவுமே நான் உணரு கிறேன்.
(1934, செப்டம்பர்)

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்



காங்கிரஸ்காரர்களுக்கு வார்தா எப்படியோ, அப் படித்தான் நம் மக்களுக்கு ஈரோடு. காந்தி யின் அறிவுரை கேட்க அவர்கள் வார்தா போவது போல, பெரியார் அறிவுரை கேட்க, நாம் ஈரோடு போகிறோம்.

சர்.கே.வி.ரெட்டி (நாயுடு)

திரு.இராமசாமி நாயக்கர் ஒரு உண்மையான சிங்கம். அவர் சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக் கிறார்; வாழ்க்கையில் அச்சம் என்ப தையே அறியாதவர். அவசியம் நேர்ந்தால் எந்தவிதமான தியாகத் திற்கும் தயாராக இருப்பவர் அவர்.

- (1928 இல் சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக இருந்தபோது)

-விடுதலை,17.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக