வியாழன், 1 ஆகஸ்ட், 2019

திராவிடரும் - ஆரியரும் (3)

சென்றவாரத் தொடர்ச்சி

08.05.1948 -குடிஅரசிலிருந்து..

உன் இனத்தான் எந்தவிதத்திலும் அறிவிலோ, ஆற்றலிலோ தாழ்ந்தவன் அல்ல என் பதை இன்றே உணர்வாய்!

ஒரு குலத்துக்கொரு நீதியை ஒழித்திட

வரிந்து கட்டு!

இதை எல்லாம் கூறினால் என்னை வகுப்புத் துவேஷி என்கிறாயே! பூசணிக்காய் அளவு எழுத்தில் பிராமணாள் ஹோட்டல் என்று போர்டு போட்டுக் கொள்கிறானே அதை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பேதம் பாராட்டு வதில்லையென்று பெருமை யடித்துக் கொள்ளும் தேசியத் தோழனே! உன் சுதந்திர ராஜ்யத்தில், நடைமுறையில் இருந்துவரும் இந்து லாவில், ஜாதிக்கோர் நீதி ஏன் கூறப்பட்டி ருக்கிறது? இந்துலா சட்ட புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கிறதே; இச்சட்டம் மனு தர்ம சாஸ்திரம் மற்றுமுள்ள இந்துமத சாஸ்திரங்கள் இவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டிருக் கிறது; இச்சட்டத்தில் ஏதாவது சந்தேகம் வருமானால் நீதிபதி தானாக முடிவு கட்டக் கூடாது; இச்சாஸ்திரங்களில் வல்லவர் களான சாஸ்திரிகளைக் கொண்டுதான் முடிவு கட்ட வேண்டும் என்று எழுதியிருக் கிறதே ஜாதி, பேதம் பாராட்டாத சாஸ்திரிகளை எங்காவது நீங்கள் பார்த்த துண்டா? அந்தச் சட்டத்தை இன்னும் புரட்டிப் பார்த்தால் ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தியிடம் பிள்ளை பிறக்கு மானால், அப்பிள்ளைக்குச் சூத்திரனுடைய சொத்தில் பங்குரிமை இருக்குமென்றும், அதேபோல், ஒரு பார்ப்பனனுக்கு ஒரு சூத்திரச்சியினிடம் ஒரு பிள்ளை பிறக்குமா னால், அப்பிள்ளைக்கு பார்ப்பனன் சொத் தில் பங்குரிமை இருக்காதென்றும் கூறப் பட்டிருக் கிறதே. இது உன் கண்களுக்கு ஏன் படாமற் போகிறது? இந்த ஒரு குலத்துக் கொரு நீதியை அனுமதிக்கும் சட்டத்தை மாற்ற உனக்கு ஏன் கவலையில்லை?

முதலில் இவைகளைச் செய்!

பாடுபடும் நான் ஏன் சூத்திரன்? பாடுபடாத சோம்பேறிப் பார்ப்பான் ஏன் பிராமணன்? என்றால் மட்டும் உனக்குப் பொத்துக் கொண்டு வரவேண்டுமோ கோபம்? சிந்திக்கும் அறிவு உனக்குச் சற்றேனும் இருக்குமானால், என்னை வகுப்புத் துவேஷி என்று கூற உனக்கு நாக்கு நீளுமா? ஏன் இந்தப் பித்தலாட்டம்? நாலு ஜாதி என்று பிரித்துக் கூறும் சாஸ்திரங்களை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பிரிவினை பற்றிக் கூறும் பகுதிகளைச் சாஸ்திரங் களிலிருந்து எடுத்து விட்டாயா? அல்லது அவற்றை எரித்து விட்டாயா? எங்களை வகுப்புத் துவேஷி என்று கூறுவதற்கு, ஹோட்டல்காரனை மனிதன் ஹோட்டல் என்று போட்டுக் கொள்ளும்படி சொல்! இந்துலாவில் ஜாதிப் பற்றி இருப் பனவற்றை யெல்லாம் திருத்தியமை! சாஸ்திரங் களை யெல்லாம் கொளுத்தி விடு! ஜாதி பிரிவினைப் பற்றிக் கூறும் சகலத்தையும் அழி! கோயிலில் மணியடிக்கச் சகல ஜாதிக்கும் உரிமையுண்டு என்று சட்டம் செய்! பிறகு நான் வகுப்புப்பற்றிப் பேசினால் வாயேன் சண் டைக்கு? அதுவரை பொறுத்துக் கொண் டிரு தம்பி! இன்றேல் உன் வண்டவாளமெல்லாம் அம்பலமாகி விடப் போகிறது.

சமபந்தியில் பார்ப்பான் என்றால் சந்தோஷப்படலாமா நீ?

பார்ப்பானெல்லாம் இப்போது சமபந்தி போஜனம்கூட செய்கிறார்களாம் ஜாதி பாராட்டாமல். எங்கள் வீட்டுச் சோறு ருசியாய் இருந்தால் எந்தப் பார்ப்பானும் தான் சாப் பிடுவான். உண்மையில் எத்தனை பிராம ணர்கள் தங்கள் வீட்டில் ஒரு பறையனையோ, சக்கிலியையோ தம்முடனி ருந்து சாப்பிட அனுமதிப்பார்கள்? நீ சாப் பிடுவதைக்கூட நாங்கள் பார்க்கக் கூடாது என்கிறாயே! அது தான் போகட்டும் என் றாலும், நான் வெட்டிய குளத்துத் தண்ணீ ரானாலும், அதையும் திரை போட்டு மறைத்துக் கொண்டுதானே குடிக் கிறாய்!

ஆலயப்பிரவேசம் உண்மை என்றால்

அவனையும் மணி அடிக்கச் செய்!

பஞ்சமனைக் கோயிலில்கூட அனு மதித்து விட்டார்களாம்! அவனும் முடிச்ச விழ்க்க வேண்டுமென்று விட்டாயா? அல்லது   மோட் சத்திற்குப் போகட்டுமென்று விட்டாயா? மோட்சத்திற்குப் போவதற் காகவே விட்டிருந் தால், இத்தனை நாள் அடித்து அனுபவித்த அந்த மணியைக் கொஞ்சம் அவனிடம் கொடேன்! அவனும் ஆசை தீர அடிக்கட்டுமே! செய்வையா? செய்தால் சாமி ஓடிப்போகுமே! அல்லது செத்துப் போகுமே!  அப்புறம் உன்னை யார் காப்பாற்றுவார்கள்? இந்த அக்கிரம மெல்லாம் செய்ய உனக்கு உரிமையுண்டு. நான் ஏன் சூத்திரன் என்று கேட்பதற்குக்கூட எனக்கு உரிமையில்லையா? கேட்டால் கலகம் செய் கிறேன் என்பதா? உனக்குப் பழக்கமாகிவிட்டது, உன் புத்தி அடிமைத்தனத்தால் சின்னப் புத்தி யாகி விட்டது.

ஆகவே, பொறுத்துக் கொண் டிருக் கிறோம். மானமுள்ள, அறிவுள்ள, வேறு எவன் இவ்விழிவைப் பொறுத்துக் கொண்டி ருக்க முடியும்? வேறு எந்த நாட்டிலாவது சூத்திரனும், பஞ்சமனும் உண்டா? இந்த உயர்வு தாழ்வு இருக்கும் வரைக்கும் இது ஒரு ஞான பூமியாகவும் ஆக முடியுமா?

- விடுதலை நாளேடு, 26.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக