புதன், 19 பிப்ரவரி, 2020

புத்த மதமும், சுயமரியாதையும் (2)

29.03.1931 - குடி அரசிலிருந்து....

சென்றவாரத் தொடர்ச்சி

ஆதலால் புத்த மதந்தான் சுயமரியாதை இயக்கமென்று யாரும் சொல்லக்கூடாது என்று சொல்லுகிறேன்.

ஏன் என்றால் உதாரணமாக புத்த மதத்திற்குக் கடவுள் இல்லை, ஆத்மா இல்லை, நித்யமொன்று மில்லை என்கின்ற கொள்கை இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள்.

இது புத்தரால் சொல்லப்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்.  இதை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம்.  இந்தக் கொள் ளைகள் புத்தர் சொன்னார் என்பதற்காக தங்கள் புத்திக்குப் பட்டாலும், படாவிட்டாலும் பவுத்தர்கள் என்கின்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியவர் களாகின் றார்கள்.

இப்படியேதான் மற்ற மதக்காரர்களும் இந்துக்களோ, மகமதியர்களோ, கிறிஸ்தவர் களோ கடவுள் உண்டு.

ஆத்மா உண்டு நித்தியப் பொருள் உண்டு மனிதன் இறந்த பிறகு கடவுளால் விசாரிக்கப் பட்டு அதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சம், நரகம், சன்மானம், தண்டனை ஆகியவைகள் கடவுளால் கொடுக் கப்படுவது உண்டு என்பன போன்ற பல விஷயங்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த நம்பிக்கைகளுக்குக் காரணம் தங்களுக்கு முன்னேயே யாரோ ஒருவர் சொன்னதாக ஏதோ ஒன்றில் இருப்பதைப் பார்த்து நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.  இவை உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம்.  இந்த இரண்டு கூட்டத்தார்களும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைத் தங்கள் தங்கள் பகுத்தறிவு, ஆராய்ச்சி, யுக்தி, அனுபவம், ஆகியவைகள் காரணமாகக் கொண்டிருக்கின் றார்கள் என்று ஏற்படுவதனால் இருதிறத் தாரும் சுயமரியாதை இயக்கக்காரர்களேயா வார்கள்.

ஏனெனில் கண் மூடித்தனமாய் முன்னோர் வாக்கு என்பதாக அல்லாமல் தங்கள் தங்கள் அறிவு ஆராய்ச்சியின் பயனாய் ஏற்பட்ட அபிப்பிராயம் என்று சொல்லுகின்றவர் களாய் இருக்கின்றார்கள்.  ஆதலால் அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் ஆகின்றார்கள்.

உதாரணமாக புத்த மதஸ்தன் என்று சொல்லிக் கொள்ளுகின்ற ஒருவன் தனக்குக் கடவுள் இல்லை  என்றும், ஆத்மா இல்லை என்றும். வாயால் சொல்லிக்கொண்டு காரண காரியங்களுக்கு ஆதாரம் என்ன என்பதை அறியாமல் சந்தேகப்பட்டுக் கொண்டு இருப்பானானால் அவன் தன்னை புத்த மதஸ்தன் என்று சொல்லிக் கொள்ள முடியவே முடியாது.  அதுபோலவே ஒரு இந்துவோ, இஸ்லாமானவரோ, கிறிஸ்தவரோ கடவுள் உண்டு என்கின்ற மதக்காரராக இருந்து கொண்டு நடப்பில் தங்கள் காரியங்களுக்கும், அதன் பயனுக்கும் தங்களைப் பொறுப்பாக்கிக்கொண்டு தங்கள் காரியங் களுக்குப் பின்னால் பயன் உண்டு என்கின்ற கொள்கையையும் நம்பிக்கொண்டு அதற்குச் சிறிதும் கட்டுப்படாமல் நடந்து கொண்டும் இருக்கின்ற ஒருவன் தன்னை கடவுள் நம்பிக்கைகாரன் என்றும், தனது ஆத்மா தண்டனையும், சன்மானத்தையும் அடையக் கூடியது என்றும் நம்பிக்கொண்டு இருக்கின் றவர்களாக மாட்டார்கள்.  ஆதலால் இந்த இரண்டு கூட்டத்தார்களும் சுயமரியாதைக் காரர்கள் அல்லர் என்று தான் சொல்லுவேன்.

ஏனெனில் அவர்களுடைய அறிவுக்கும், அனுபவத்திற்கும், விரோதமான நம்பிக்கையை உடையவர்களாக இருக்கின்றார்கள்.  ஆத லால், இவ்விரு கூட்டத்தாரிலும் சுயமரி யாதைக் காரர்கள் என்பவர்கள் தங்களுக்குத் தோன்றியவைகளும்.  தாங்கள் கண்ட உண் மைகளும் முன்னோர் கூற்றுக்கு ஒத்திருந்தால் மாத்திரம் முன்னோர் கூற்றும் ஆதரவாக எடுத்துக்கொள்ள பாத்திரமுடைய வர்களா வார்கள்.

அப்படிக்கில்லாமல் முன்னோர் கூற்றுக்குத் தான்கூட உண்மையை பொருத் துகின்றவர்களும் அல்லது அதற்கு ஆதரவாகத் தங்களது உண்மை இருக்கின்றது என்று கருதுகின்றவர்களும் சுயம ரியாதைக் காரராக மாட்டார்கள்.

ஆகையால் நீங்கள் எப்படிப்பட்ட கொள் கையை உடையவர்களாக இருந்தாலும் அதில் எவ்வளவு உண்மை இருப்பதாகயிருந்தாலும் அதை நீங்கள் பிரத்தியட்சத்தில் தெளிவுப் படுத்திக் கொண்டீர்களா? அனுபவத்தில் சரிப்பட்டு வருகின்றதா? என்பதைப் பூரண மாய் அறிந்து கொண்டவர்கள் என்பதை பொறுத்தும், அவை உங்களுடைய சொந்த அபிப்பிராயத்தின் மீது நம்புகின்றீர்களா? அல்லது அந்தந்த கொள்கையுடைய மதத் தலைவர்கள் சொன்னதற்காக நம்பிக்கொண் டிருக்கிறீர்களா? என்பதைப் பொறுத் துமேதான் உங்கள் மதத்திற்கோ, கொள்கைக் கோ மதிப்பு கிடைக்கும். அப்படியில்லாமல் ஒருவன் தன்னை இந்து என்றோ, கிறிஸ்தவர் என்றோ, மகமதியர் என்றோ, பௌத்தர் என்றோ சொல்லிக்கொள்ளுகின்றவர் ஒரு நாளும் சுயமரியாதைக் காரராக மாட்டார்.

ஏனெனில், ஒரு குறிப்பிட்ட மதத்துக்காக ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டி ருக் கிறார். என்பதோடு அது தன்னுடைய நடைமுறைக்குப் பிரத்தியட்ச அனுபவத்திற்கு ஒத்து வராதிருந்தும் அக்கொள்கைக்காரன் காரணக்காரியங்கள் அறிய முடியாமல் இருந்தும் அவற்றையுடைய ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது என் பது சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாததாகும்.

(சென்னை மவுண்ட்ரோட்டில் உள்ள தென் இந்திய புத்தமத சங்கத்தில் 22.03.1931 அன்று ஆற்றிய சொற் பொழிவு)

-  விடுதலை நாளேடு, 31.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக