புதன், 26 பிப்ரவரி, 2020

காசில்லாமல் நடத்தலாம் சித்திரபுத்திரன்

20.09.1931 - குடிஅரசிலிருந்து...

அய்யா! உங்கள் கலியாணத்திற்கு மந்திரம் வேண்டுமா? பார்ப்பான் வேண்டுமா? மந்திரம் பிரதானமானால் மந்தி ரத்தை ஒரு கிராமபோன் ரிகார்டில் பிடித்து வைத்துக் கொண்டால் தாலிகட்டுகின்றபோது கிராமபோன் வைத்து தாலிகட்டி விடலாம். பார்ப்பான் வேண்டுமானால் ஏதாவது ஒரு பார்ப்பானை போட்டோகிராப் பிடித்து அதை மணவறையில் வைத்து தாலிகட்டிவிடலாம். இரண்டும் வேண்டுமானால் இரண்டையும் வைத்து தாலிகட்டிவிடலாம். வாத்தியம் வேண்டுமானாலும் கிராமபோனிலேயே மதுரை பொன்னுச்சாமி வாத்தியம் வைக்கலாம். ஒன்றும் வேண்டாம், பெண்டாட்டியும் புருஷனும் ஆனால் போதும் என்றால் விரலில் மோதிரத்தை மாட்டி கழுத்தில் மாலைபோட்டு கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போகலாம்.

- விடுதலை நாளேடு 21.2. 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக