செவ்வாய், 22 டிசம்பர், 2015

பிராமணன் வந்தானா? (சித்திர புத்திரன்)


குடித்தனக்காரன்:- அய்யா ஆ ஆ ! எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா! எவ்வளவு தண்ணீர் ஊற்றியும் அவிய மாட்டேன் என்கின்றது. எல்லோரும் வந்து கொஞ்சம் உதவி செய்யுங்கள். உங்கள் பிள்ளை குட்டிகளுக்கு புண்ணி யமாகும்
சித்திரபுத்திரன்: அய்யய்யோ ! ஏனப்பா நெருப்புப் பிடித்தது?
குடி: ஒருத்தருக்கும் தெரியவில்லை அய்யா !
சித்தி: அப்படியானால் உங்கள் வீதியில் பிராமணன் இருக்கின்றார்களா?
குடி: ஆம் அய்யா, காலையில் ஒரு பிரா மணர் ஆத்துக்கு போய் குளித்துவிட்டு மொண மொணா என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில்தான் போனார்.
சித்தி: சரி, சரி, உங்க வீதி வீடுகள் வெந்து போனதற்குக் காரணம் தெரிந்து போயிற்று.
குடி: என்ன அய்யா, எனக்கு தெரிய வில்லையே !
சித்தி: இது தெரியாதா உனக்கு; பிராமணாள் கையில் நெருப்பு இருக்கிறதே; நீ கேட்ட தில்லையா?
குடி: நான் கேட்டதில்லையே !
சித்தி: அட பயித்தியமே, பிராம ணாள் நாம் கும்பிட்டால் அவர்கள் இடது கையை மோந்து பார்ப்பது போல் மூக்குக்குப் பக்கத்தில தூக்குகிறார்களே ! அது ஏன்? வலது கையில் அக்கினி இருப்பதால் அது தூக்கினால் எரிந்து போய்விடுவோம் என்று இடது கையை மோந்து பார்ப்பது.
குடி: அப்படியா! அது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவர்களை அந்த வீதியிலேயே நடக்க விட்டு இருக்கமாட்டேனே, ஏமாந்து போய் விட்டேன்.
சித்தி: அது மாத்திரமா! _ பிராமணாள் வாயிலும் நெருப்பு வயிற்றிலும் நெருப்பு: இது உனக்கு தெரியாதா?
குடி: தெரியவில்லையே! சற்று தெரியும்படியாய் சொல்லுங் களேன்.
சித்தி: பிராமணாள், எங்கள் வாயில் விழுந்தால் பஸ்பமாய்ப் போய்விடுவாய் என்று சொல்லுகின்றார்களே அது என்ன? வாயில் நெருப்பு இருப்பதால்தானே அவர்கள் அப்படிச் சொல்லுவது. தவிரவும், பிராமணாள் நம்மைப்பற்றி ஏதாவது நினைத்தால் நாம் பஸ்பமாய் விடுவோம் என்று சொல்லுகின் றார்களே அதன் அர்த்தம் என்ன? நினைத்தால் பஸ்பமாய் விடுவ தாயிருந்தால் வயிற்றில் நெருப்பு இல்லாவிட்டால் முடியுமா?
குடி: இதென்ன இந்த இழவு பார்ப்பனர்கள் சங்கதி. கையில் நெருப்பு, வாயில் நெருப்பு, வயிற்றில் நெருப்பு. இப்படி வைத்திருந்தால் நாம் எப்படி அவர்களோடு வாழுவது. இப்படி தினம் ஒரு வீதி வெந்து சாம்பலாவதானால். இந்த நாலு பிராமணாளாலேயே இந்த ஊரே சீக்கிரம் சாம்பலாய்விடும் போலிருக்கிறதே.
சித்தி: பின்னே தெரியாமலா நம்முடைய பெரியவாள் பிராம ணர்களை கிட்ட சேர்க்க வேண்டாம் என்று சொல்லுகின் றார்கள்.
குடி: ஓ ! ஹோ !! இதற்காகத்தான் அவர்கள் அப்படி சொல்லு கின்றார் களா ! சரி இனி புத்தியாய் பிழைத்துக் கொள்ளுகிறேன். இந்த நெருப்பை எப்படியாவது அணைத்து விடுங்களய்யா.
குடிஅரசு 18.3.1928

தந்தை பெரியார் பொன்மொழி
நாம் உண்மையிலேயே ஒரு நாட்டவர்; ஓர் இனத்தவர்; ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரே பழக்க வழக்கங் களோடு இருக்கிறவர்கள்; ஒரு காலத்தில் இந்நாட்டை ஆண்டவர்கள்; வெகுநாளாக இருந்து வருபவர்கள்;
இன்னும் வெகு நாளைக்கு எப்போதும் இங்கேயே இருக்க வேண்டியவர்கள். நாம் யாவரும் ஒன்று. நாம் யாவரும் சரிநிகர் சமான மானவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியில்லாத நிலைமையில் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறோம்.

ஒரு பார்ப்பனரின் கணிப்பு!
தீண்டாமை என்பது சமய சம்பந்தப்பட்டிருக்கிறது. அதை சமய சம்பந்தத்தினால் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகிறேன்.
நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்பொழுது சங்கராச்சாரி பீடத்தில் அமருகின்றாரோ அப்பொழுதுதான் தீண்டாமை ஒழிந்த தாக கருதமுடியும்.
-காகா கலேல்கார்
ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய புதிய மனிதன் என்ற நூல்


.-விடுதலை,11.7.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக