சனி, 12 டிசம்பர், 2015

சுயமரியாதை அரிச்சுவடி

1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சு மாறிகள் பேச்சு
2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி
3. இதிகாசம் என்பது - மதிமோச விளக்கம்
4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே.
5. ஊழ்வினை என்பது  - ஊக்கத்தை கெடுப்பது.
6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம்
7. கல்லை தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம்
8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது
9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம்
10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல்
11. சூத்திரன் என்றால் - ஆத்திரங் கொண்டடி
12. திதி கொடுப்பது - நிதியைக் கெடுப்பது
13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்கு கேடு
14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க
15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற் கொள்ளைக்காரர்கள்
16. புராணங்கள் - பொய் களஞ்சியங்கள்
17. பேதமென்பது - வேதியருக் கணிகலம்
18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்
19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள்
20. மதக்குறி என்பது  - மடையர்க்கறிகுறி
21. முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே
22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது
23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது
24. ஜாதி வேறுபாடு - ஜன சமூகத்திற்குக் கேடு
25. க்ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு
- குடிஅரசு  23.2.1930

மூடநம்பிக்கை - அறியாமை -இவற்றின் விளைவாக ஏற்படுகிற சுடுகாட்டு அமைதியை விட, சுய சிந்தனை - பகுத்தறிவு - இவற்றின் விளைவாக ஏற்படுகிற கடும் புயலை யும், கோடை இடியையும்தான் நான் விரும்புகிறேன்.
-இங்கர்சால்
-விடுதலை,13.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக