வியாழன், 24 டிசம்பர், 2015

பெரியார் எனும் கல்வியாளர்!


ஏன் என்று கேள்வி கேட்பதிலிருந்தே கல்வி கற்றல் தொடங்குகிறது

- பூ. மணிமாறன்

பாவ்லோ பிரையரின் கல்விச் சிந்தனைகள் தந்தை பெரியார் எனும் கல்வியாளரை பளிச்சென்று அடை யாளம் காட்டுபவை. பெரியாரைப் பற்றிய கட்டுரையில் இந்த இடத்தில் பாவ்லோ பிரையரை நான் கொண்டு வரக் காரணம், வெறும் கல்விச் சிந் தனையாளர் மட்டுமே அல்ல அவர்; பெரியாரைப் போலவே அவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்ககாகத் தங் களது இறுதிமூச்சு வரை பேசினார், அவர்களுக்குக் கற்பித்தார் என்பதுதான்.
பெரியாரும் பிரையரும்
கல்வி என்பது வெறும் பாடத்தை மட்டுமே படிப்பதல்ல; உலகை, மக்களை, தமது சூழலை, இயற்கையை, இருத்தலைக் கற்பித்தலும் கல்வியே. ஏன் என்று கேள்வி கேட்பதிலிருந்தே கல்வி கற்றல் தொடங்குகிறது எனும் முறைமையையே பெரியாரும் பிரை யரும் பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். பாவ்லோ பிரையர் உள்ளிட்ட அனைத்து விடுதலைக் கல்வியாளர்களையும் போலவே பெரியாரும், மக்கள் அனைத்து அடிமைத்தளைகளிலிருந் தும் விடுதலை அடைவதற்கான வழி முறை கல்வி என்றே வலியுறுத்து கிறார். ஆனால், நமக்குக் கொடுக்கப் படும் இன்றைய கல்வியானது சிந்தித் தலுக்கு எதிராகவே உள்ளது. சிந் தனையை மறுக்கும் விதமாகவே கல்விமுறை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலை மாற்றியமைக்கும் புள்ளியில்தான் பெரியாரும் பிரை யரும் தங்களது பணியினைத் தொடங்குகின்றனர்.
பெரியார் கல்வி நிலையங்களின் வழி தன்னை வளர்த்துக்கொண்டவர் அல்ல. நான்காவது வரை மட்டுமே அவர் படித்ததை அவருடைய வர லாறு நமக்குச் சொல்கிறது. அப்போதும் கூடப் படிப்பு வரவில்லை என்றே அவருடைய ஆசிரியர்கள் சொல்லியி ருக்கின்றனர். தொடர்ந்து, வணிகத்தை நோக்கி அவரை அவருடைய குடும்பத் தார் நகர்த்தியிருக்கின்றனர். பின் எங் கிருந்து பெரியார் கல்வியைப் பெற்றார்? அலைந்து திரிந்தே அவர் கல்வியைப் பெற்றார். அப்படிப் பெற்ற அறிவைத்தான் மக்களிடம் பரப்பினார்; கல்வியாக்கினார்.
பெரியார் தனது கருத்துக்களுக்கு என்றைக்கும் இறுதி வடிவம் கொடுத்த வரல்ல. அவர் உரையாடல்களில் மிக முக்கியமான வேண்டுகோள், தனது எந்தக் கருத்தையும் அப்படியே ஏற்க வேண்டாம்; சிந்தித்து சரியெனப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் கூறியது.
முரண்பட்ட கூறுகள்
நமது மரபுரீதியிலான கல்வி முறை, ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்விமுறை, நமது இந்திய அரசு நடைமுறைப்படுத்திவரும் கல்விமுறை எல்லாவற்றிலுமே பெரியார் சில முரண் பட்ட கூறுகளைக் காண்கிறார். அவற்றில் சில விஷயங்களை அடையாளப்படுத் தவும் செய்கிறார். 1. சமூகங்களிடையே கல்வி சமமாகச் சென்றடையவில்லை; ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர்; 2. சரி, படிக்கும் வாய்ப் புப் பெற்றவர்களாவது அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் எனச் சொல்ல முடிவதில்லை; 3. எந்தத் துறை சார்ந்த படிப்பானாலும் மூடநம்பிகையுட னேயே புகட்டப்படுகிறது. பெரியார் கல்வி தொடர்பாகப் பேசிய/எழுதியவற்றில் அதிகம் குறிப்பிடும் குறைகள் இவை.
சரி, இப்போது பாவ்லோ பிரையர் கல்வி தொடர்பாக வரையறுக்கும் சில அளவுகோல்களைப் பார்ப்போம். ஒன்று, இருக்கிற சமூக அமைப்புக்குத் தக்கவராக மனிதர்களை மாற்றுதல் அல்லது இருக்கிற ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பைக் கவிழ்த்து, முற்றிலும் மாற்றி மனிதரின் விடுதலைக்கு வழிவகுப்பது ஆகியவை மட்டுமே கல்வியாக இருக்க முடியும். இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை யிலிருக்கும் கல்வி என்று ஒன்று இல்லவே இல்லை என்கிறார் பிரையர். கல்வியில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக் கிறது என்கிறார்.
கல்வியும் அரசியலும்
இந்திய அரசியலில் அதைச் செயல் படுத்திய மிகச் சிலரில் பெரியாரும் ஒருவர். அரசியல் அதிகாரத்தை அடையும் வழியாகவே கல்வியை பெரியார் வலியுறுத் துகிறார். மனிதர்கள் இவ்வுலகில் சக மனிதர்களுடன் தொடர்ச்சியாக தேடல் தொடங்குவதன் விளைவே அறிவு உற்பத்தி ஆகிறது என்கிறார். அறிவு என்பது அறிவாளிகளால் அறிவற்றவர் களுக்கு அளிக்கப்படும் வரம் என்று நாம் பார்ப்பது, கற்பவர் மீது அறியாமை யைச் சுமத்தும் ஒடுக்குமுறையாகவே அமையும். இம்முறையில், அறிவையும் கல்வியையும் தேடலாக அணுகும் முறை ஒழிக்கப்படு கிறது. ஆனால், பெரியார் வழிக் கல்வி யானது பாவ்லோ பிரையர் சொல்லும் கல்வி வரையறைகளோடு அனுசரித்துப் போவது.
ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது பிரச்சினையை எடுத்துக்கொண்டு, ஆரோக் கியமான கலந்துரையாடல் வழியாக இலக்கு மாறாமல் அடுத்தடுத்த கட்டத் துக்கு முன்னேறிச் செல்வதே பிரையர் முன்வைக்கும் உரையாடல். கூடவே, எழுதுதல், வாசித்தல், மறுவாசிப்பு செய்தல், எழுதியதை மீண்டும் திருத்தி எழுதுதல் ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தவர் பாவ்லோ பிரையர்.
மவுனமும் மனித விரோதமே
மனித இருப்பு எப்போதும் மவுனமான தாகவே இருக்க முடியாது. உலகையும் சமூகத்தையும் மாற்றி அமைக்காத பேச்சும்கூட மவுனமே. சமூக அக்கறை யுடன் பேசுவது என்பதோ, சமூகத்தை மாற்றி அமைப்பதோ ஒரு சில மனிதர் களின் தனிமனித உரிமையல்ல. அது ஒரு ஒட்டுமொத்த சமூக உரிமை. ஆகவே ஒரு மனிதனின் பேச்சு ரிமையைப் பறிப்பது - அதாவது அவன் எந்த ஒரு காரணத் தினால் பேச முடியாத நிலைக்குத் தள்ளப் படுவதும் - மனித விரோதச் செயலே. ஆகையால்தான், பெரும்பான்மை யான மக்களை ஒடுக்கும், ஏற்றத் தாழ்வான சமூக அமைப்புக்குள் பெரும் பாலும் உரை யாடல்கள் நிகழ்வதில்லை. ஆகை யால்தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் முதலில் மக்களைக் கேள்வி கேட்கவைப்ப தையே பிரதான கல்வியாக நினைக்கின்றனர்.
உலக அளவில் கல்வி முறை என்பது ஆதிக்க சக்திகளுக்கு உரிய வையாக உள்ளதைக் கண்டு வெகுண் டெழுந்தவர் பாவ்லோ. பெரியார் இந்தியக் கல்வி முறையில் ஆதிக்கத் தின் இடத்தை சாதி ஆக்கிரமித் திருப்பதற்கு எதிராகக் கிளர்ந்தெழு கிறார். கல்வி, சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத் தளங்கள் என அனைத் திலும் மாற்றுகளைத் தேடியவர் பெரியார். தனது கருத்துகளே தனக்குப் பின் வரும் காலத்தில் பிற்போக் கானவை என ஒதுக்கத்தக்கதாகப் போய்விடும் எனக் கூறி, முற்போக் கான மாற்றுகளை முன்மொழிந்தவர். கல்வி என்பது எந்த ஒரு விஷயத் தையும் திணிப்பது என்பதை விடுத்து, ஏற்கெனவே மக்கள் மத்தியில் கடவுளின் பெயரால், மதத்தின் பெய ரால், சாதியின் பெயரால் பண்பாட்டுக் கூறுகளின் பெயரால், பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள ஆதிக்கக் கருத்தாக்கங் களிலிருந்து ஒருவரை விடுவித்து நிர்வாணமாக்கு வதே சரியான கல்வியாகும் என்று நினைத்தவர். எத்தகைய முன்முடிவுக ளோடும் பிணைத்துக்கொள்ளாமல், ஒன்றை அணுகும்போது மட்டுமே ஒரு சரியான முடிவுக்கு வர முடியும்; எனவே, முன்முடிவுகளைத் துறந்து நிர்வாணமாக்கிக்கொள்வது கற்றலின் முதற்படி என்று நினைத்தவர். பெரி யாரியக் கல்வியில் பற்றற்றுப்போவது முக்கிய மானது. பற்றற்றுப்போதலே அனைத்திலுமான விடுதலைக்கு வழி வகுக்கிறது!
- பூ.மணிமாறன்,
பெரியாரிய எழுத்தாளர்,
மனித உரிமை ஆர்வலர்
நன்றி: ‘தி இந்து’ 24.12.2015
-விடுதலை,24.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக