திங்கள், 1 ஜூலை, 2019

ஏன் அரசியல் நிர்ணய சபையைக் கலைக்க வேண்டும்?



12.06.1948  - குடிஅரசிலிருந்து...

1. அரசியல் பிரதிநிதித்துவ சபை இந்திய யூனியன் மக்கள் பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல.

2. இப்போதிருக்கும் சட்டசபை மெம்பர்கள் தேர்தல் நடக்கும்போது, இந்த நாட்டில் இருந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியாகும்.

3. பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சி மீது இருந்த அதிருப்தி காரணமாகவும், சரியான பிரதிநிதித்துவம் இல்லாத காரணமாகவும் சில கட்சிகளும், சில பொதுநலச் சீர்திருத்தக்காரர்களும், சில தனிப்பட்ட நபர்களும் தேர்தலுக்கு நிற்க வில்லை. இதைத் தேர்தலுக்கு முன்பே தெரிவித்து இருக்கிறார்கள்.

4. பிரிட்டிஷ் ஆட்சியார் தங்களுக்கு வசதியான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்கு ஆக இந்த நாட்டில் பார்ப்பனர் களுக்கும், படித்தவர்களுக்கும் மாத்திரம் ஓட்டு உரிமை இருக்கும்படி வசதி செய்து கொண்டு, 100க்கு 12 பேர்களுக்கே ஓட்டு உரிமை கொடுத்து விட்டு மற்ற மக்களுக்கு ஓட்டுரிமை பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்திருந்த முறையில் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்தான் இப்போதைய சட்டசபை மெம்பர்களாவார்கள்.

5. தவிர இந்த மெம்பர்கள் தெரிந்தெடுக்கப் படும் போது குடியேற்ற நாட்டந்ததுப் பேச்சும், இந்தியா ஒரே யூனியனாக இருக்க வேண்டும் என்கின்ற பேச்சும் இருந்ததில்லை.

6. பெரிதும் கிரிப்சு திட்டம்தான் அதுவும் பேச்சு வார்த்தையில்தான் இருந்தது.

7. இன்றைய இந்திய யூனியனில் நடந்து வரும் சுதேச சமாதானக் கொள்கை, உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டதற்குக் காரணமாக இந்திய யூனியன் அரசாங்கத்தார் நடந்துவரும் கொள்கை முதலியவை தேர்தல் காலத்தில் பிரச்சினையாக இல்லை.

8. தேர்தல் காலத்தில் இருந்து வந்த, காங்கிரஸ் அங்கத்தினர்களைச் சேர்க்கும் இரசீதுகளிலும், அக்காலக் காங்கிரஸ் கொள் கைகள் திட்டங்களிலும் இருந்து வந்த வாக்குறுதி  அளித்த காரியங்கள், கருத்துக்களுக்கு விரோதமாகவே அரசியல் நிர்ணய சபை காரியங்கள் நடக்கின்றன.

9. வகுப்பு மதம் விஷயங்களில் காங்கிர வாக்குறுதிகளை அரசியல் நிர்ணயசபை சிறிதும் லட்சியம் செய்யவில்லை.

10. காங்கிரஸ் பாதுகாப்பு அளிப்பதாகவும், மாற்றி அமைப்பதாகவும் சொன்ன வாக் குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
- விடுதலை நாளேடு, 22. 6 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக