சனி, 13 ஜூலை, 2019

புரிந்ததா - இதுதான் பெண் விடுதலை!




இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை என்று பேசுகிறார் களே, அதென்ன விடுதலை! எனக்கு ஒன்றும் புரியவில்லையே?

இராமன்: உனக்கெப்படியப்பா புரி யும்? உனக்கு கால் டஜன் பெண்டாட் டிகள் இருக்கிறார்கள், அரை டஜன் வைப்பாட்டிகள் இருக்கிறார்கள். அதோடு நிறையப் பணமும் இருக்கிறது.

இராஜன்: நான் சொல்லுவது உனக்கு கேலியாக இருக்கிறது, இந்தப் பெண்களிடமிருந்து எனக்கு (ஆண் களுக்கு) விடுதலை கிடைப்பது தான் பெரிய கஷ்டமாயிருக்கிறது. ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இருக்கிறாள். இவர்களை விட்டு நான் எப்படி - விடுதலை அடைவது?

இராமன்: சரிதான், இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப்படுவதனால். உனக்குத்தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதாதோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக 72 வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்ப தில் ஒருவனாக இருக்க சம்ம திப்பாயா?

இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்குக் கூசாமல்?

இராமன்: பெண்கள் விடுதலை என்றால் இப்போது உனக்கு அர்த்த மாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர் களை அடைத்து வைக்கலாம். அது மனுஷத்தன்மை 'என்கிறாய். ஒரு பெண் 9 கணவனை வைத்துக் கொண் டிருந்தால் அது மிருகத்தனம் என்கி றாய், இந்தக் கொள்கை போக வேண்டு மென்பதைத் தான் பெண்கள் விடு தலை என்று சொல்லுவது புரிந்ததா?

(பெண்கள் விடுதலை"

என்னும் தலைப்பில், "சித்திரபுத்திரன்” என்னும் புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.

- 27.9.1947,

('குடிஅரசு' பக்கம் 7)

-  விடுதலை ஞாயிறு மலர், 15.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக