திங்கள், 10 அக்டோபர், 2016

இந்து மதம் ஒழிய வேண்டும்



'குடிஅரசு' 21.8.1932
இந்துமதம் அழிந்தால் தான் இந்துக்கள் உருப்படமுடியும் என்பதை முக்கியமாக எடுத்துக்காட்டி வருகிறோம். இவ் விஷ யத்தை நாம் சொல்லும் போது தான் நம்மை இந்து மதத் துரோகி கள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் நாதிகர்கள் என்றும் நம்மைப்பற்றி நம் எதிரிகள் பொது ஜனங்களிடையில் துவேஷப் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார்கள். எதற்காக நாம் இந்து மதம் முதலில் அழிந்து தீர வேண்டும், அல்லது அழிக்கப்பட்டு ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்றோம் என்பதை, அறிந்தார்களானால் நம்மைப் பகுத்தறிவுடையவர்கள் அவசரப்பட்டு ஒதுக்கி விட மாட்டார்கள். அல்லது நம்மோடு அவசரப்பட்டுச் சண் டைக்கு வரமாட்டார்கள் என்பது நிச்சயமாகும். ஆகையால், அக்காரணத்தைச் சிறிது கூற விரும்புகிறோம்.
சாதி வித்தியாசம் கடவுள் என்பவராலேயே ஏற்படுத்தப் பட்டது என்பது இந்து மதக் கொள்கை வேதங்கள் என்பவை களிலும், மிருதிகள் என்பவைகளிலும், கடவுள் என்பவரின் முகத்தில் இருந்து பிராமணன் என்னும் சாதியும், தோளி லிருந்து சத்திரியன் என்னும் சாதியும், தொடையிலிருந்து வைசியன் என்னும் சாதியும், பாதத்திலிருந்து சூத்திரன் என்னும் சாதியும், பிறந்ததாகக் கூறுகின்றன. இந்தச் சாதி வேற்றுமையை ஆதார மாகக் கொண்டே உயர்வு தாழ்வுகளும், தொழில்களும் கற்பிக் கப்பட்டன. ஆதியில் ஏற்படுத்தப்பட்ட இந்த நாலு வகையான சாதி வேற்றுமையே இப்பொழுது நாலாயிரக் கணக்கான சாதி வேற்றுமைகள் தோன்றி நிலைத்திருப்பதற்குக் காரணமாக இருந்தன.
அன்றியும் மக்கள் சமுகத்தில் பாதித் தொகையாக இருக் கின்ற பெண்கள் சமுகத்தைக் கொடுமைப்படுத்தி, அடிமைப் படுத்தி அவர்கள் ஒன்றுமறியாத அபலைகளாக வைத்திருப் பதற்கு காரணமும் இந்து மதமேயாகும்.
இன்னும் எண்ணற்ற பண்டிகைகளையும், திரு விழாக் களையும் ஏற்படுத்தி ஏழைமக்களின் பொருளை வீணாகச் செலவழிப்பதற்குக் காரணமாயிருப்பதும் இந்து மதமே யாகும்.
கல்யாணத்திலும் கருமாதியிலும், இன்னும் பலகாரியங் களிலும் பலவகையான அர்த்தமற்ற சடங்குகளை ஏற்படுத்தி, இவைகள் மூலம் ஏழை மக்களின் பொருளைப் பார்ப்பனர் களுக்குப் போய் சேரும்படி செய்வதற்குக் காரணம் இந்து மதமேயாகும்.
காளியென்றும், கருப்பன் என்றும், முனியாண்டி என்றும், சிவன் என்றும், பெருமாள் என்றும் பலவகையான சாமி களையும், அவைகளுக்கு விக்கிரகங்களையும், அவ்விக் கிரகங்களுக்குக் கோயில்களையும் ஏராளமானப் பொருளைச் செலவு செய்து கட்டி வைத்து அவைகளின் பேரால் நாள் தோறும், வாரந்தோறும், வருஷந்தோறும், ஆயிரக் கணக்காக வும், லட்சக்கணக்காகவும், கோடிக்கணக்காகவும், பணத்தை வீணாகச் செலவு செய்து விட்டு இந்திய நாடு வறுமையடை வதற்கு காரணமாய் இருப்பதும் இந்து மதமேயாகும்.
இவ்வாறு எந்த வகையில் பார்த்தாலும் இந்து மதமானது அதை பின்பற்றும் மக்களை நாள் தோறும், அடிமைகளாகவும், தரித்திரர்களாகவும், மூடர்களாகவும், ஒருவரோடு ஒருவர் ஒன்று சேர முடியாதவர்களாகவும் செய்து கொண்டு வருகிறதே யொழிய மற்றபடி கடுகளவு நன்மையையாவது உண்டாக்க வில்லை என்பதை, மதம் என்னும் பாசியினால் மறைக்கப் படாத மூளையை உடையவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்து மதத்தினால் விளையும் இத்தகைய கெடுதிகளை நன்றாய் அறிந்தே காலஞ்சென்ற பெரியார்களாகிய இராமா நுஜர், சைதன்னியர், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் முதலியவர்கள் சாதி வேற்றுமையை ஒழிக் கவும், பெண்களின் அடிமையை அகற்றவும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் இன்று ஏட்டளவிலும், பேச்சளவிலும் நிற்பதைத் தவிர ஒரு பலனையும் தரவில்லை என்பதை நாம் அறிந்துதான் இருக் கின்றோம். இவ்வாறு அவர்கள் முயற்சி பலன் தராமல் போன தற்குக் காரணம் பெரும்பாலும் இந்து மதமே என்பதில் அய்ய மில்லை சாதிபேதம் பெண்ணடிமை ஆகிய அஸ்திவாரங்களின் மேல் கட்டப்பட்டிருக்கும் இந்து மதத்தை வைத்துக் கொண்டே அந்த சாதிபேதத்தையும், பெண்ணடிமையையும் ஒழிக்க வேண்டுமென்றால் எப்படி முடியும்? ஆகையால் நாம் இந்து மதமாகிய வீட்டையே  முழுவதும் இடித்து எறிந்தால்தான் அதன் அஸ்திவாரமாகிய சாதி பேதம், பெண்ணடிமையாகிய இரண்டையும் அடியோடு பெயர்த்தெறிய முடியும் என்று கூறு கின்றோம். ஆகவே நமது நோக்கம் சாதி பேதமும், பெண்ணடி மையும் ஒழிய வேண்டுமென்பது தான் என நாம் எடுத்துக் காட்டுவது மிகையாகும்.
ஆகையால், யார் யார், சாதி வேற்றுமைகளை ஒழித்து மக்களுக்குள் சமதர்மத்தை நிலை நிறுத்தவும், பெண்களுடைய அடிமைத்தன்மைக்கான காரணங்களை எல்லாம் ஒழித்து அவர்களுக்கும் ஆண்களைப்போல் சம உரிமை அளிக்கவும் பாடுபடுகின்றார்களோ அவர்களையெல்லாம் நாம் பாராட்டு கின்றோம். இத்தகைய கொள்கைகளுடன் உழைத்து வரும் இயக்கங்களுக்கும், மக்களுக்கும், சாதிரங்களுக்கும் மதங்களுக் குங்கூட நாம் எதிரிகளல்ல வென்பதைச் சொல்லிக் கொள்ளு கிறோம். 
-விடுதலை,15.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக