புதன், 25 செப்டம்பர், 2019

பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?

05.06.1948  - குடிஅரசிலிருந்து




கடவுள் என்றால் கல், களிமண், புல், பூண்டு, செடி, கொடி, கழுதை, குதிரை, சாணி, மூத்திரம் இத்த னையும் கடவுளா? கடவுள் என் றால் அறிவுக்குக் கட்டுப் பட்டதாக இருக்க வேண்டாமா? திருப்பதிக் குப் போய் மொட்டை யடித்துக் கொண்டு வருகிறீர்களே!

சாமி மயிரா கேட்கிறது? எந்தப் பார்ப் பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையே? மொட்டையடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருடனாவது ஓடி விடுகிறார்களே! அப்படி இருக்க உங்கள் மயிரைத்தானா சாமி கேட்கும்? உங்கள் கணவன்மாரைக் காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே அது தகுமா?

எந்தப் பார்ப் பானாவது பழனி ஆண்ட வனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக் கிறீர்களா? அய்ந்து புருஷர்கள் போதா தென்று 6 ஆவது புருஷனையும் விரும்பிய துரவு பதியம் மாளை போய்க் கும்பிடுகிறீர்களே!

அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே, உங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷர்கள் வேண்டுமென்று வரங்கேட்கவா, அந்தப்படி செய்கிறீர்கள்? திராவிடத் தாய் மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?

(08.05.1948 அன்று  தூத்துக்குடியில்  நடந்த திராவிடர் கழக மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)


- விடுதலை நாளேடு, 28. 6 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக