புதன், 25 செப்டம்பர், 2019

கோயிலுக்குப் போகாதீர்!

குண்டர்களுக்கு பொருளை கொடுக்காதீர்


05.06.1948  - குடிஅரசிலிருந்து

இது அறிவு பற்றிப் பேசும் இடம். ஆகவே, நீங்களும் ஏதாவது அறிவு பெற்றுச் செல்ல வேண்டாமா? கொஞ்சம் காது கொடுத்துக் கவனத்தோடு கேளுங்கள். தாய்மார்களே! நீங்கள் தற்போது தழுவி நிற்கும் இந்துமத வருணாசிரம தர்மப்படி, நீங்கள் சூத்திரச்சிகள், பார்ப்பனனின் தாசிகள் என்பதை முதலில் உணர்ந்து கொள் ளுங்கள். கடவுள்களுக்கும் நீங்கள்தான் தாசிகள்.

எந்தக் கடவுளும் சூத்திரச்சிகளுடன்தான் லீலை செய்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றனவே ஒழிய, எந்தக் கதையும் கடவுள் பார்ப்பனத்தி களோடு லீலை செய்ததாகக் கூறக்காணோம். கடவுள் அவதாரமெல்லாம் நம் பெண்களின் கற்பைத்தான் சோதித்ததாகக் கதைகளில் கூறப் படுகிறதே ஒழிய, நம்மவரின் பெண்களைத்தான் கைப்பிடித்திழுத்துக் கற்பழித்ததாகக் கூறப்படு கிறதே ஒழிய, எந்தக் கதையிலும் பார்ப்பனப் பெண், கடவுளால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படக் காணோம். அவ்வளவு இழிவு படுத்திவிட்டார்கள் இந்த அன்னக்காவடி பார்ப்பனர்கள் நம்மை. இதை யறியாமல் நீங்கள் இன்னும் அவன் காலடியில் வீழ்ந்து காசு பணம் அழுது வருகிறீர்கள்.

இனி நீங்கள் ஒரு காசு கூட எந்தப் பார்ப்பானுக்கும் அழக்கூடாது. உங்கள் வீட்டு நல்ல காரியங்களுக்கோ, கெட்ட காரியங்களுக்கோ அவனை ஒரு நாளும் அழைக்கக் கூடாது. நீங்கள் கோயிலுக்குப் போகக் கூடாது. போவதாயிருந்தாலும் பார்ப்பான்தான் பூசை செய்ய வேண்டுமென்கிற கட்டுத்திட்டம் உள்ள கோயிலுக்கோ இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக் கொண்டு, அதோடு ஒரு வைப்பாட்டியையும் வைத்திருக்கும் சாமி களுள்ள கோயிலுக்கோ, நீங்கள் கட்டாயம் போகக் கூடாது.

- " விடுதலை நாளேடு 28.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக