ஞாயிறு, 15 நவம்பர், 2015

புரோகிதன் ஓட்டம்


புரோகிதர்: பிள்ளைவாள் இன்று அர்த்தோதய புண்ணிய காலம். சிரார்த்தம் பண்ணுவதற்கு வெகு திவ்யமான தினம். உங்கள் தோப்பனார் இருந்தார், அவாளே நம்மைக் கூப்பிட்டிருப்பா, நீங்கள் மறந்தூட்டீர்கள் போலிருக்கு, ஆனாலும் பாரம்பரிய பாத்யதை விட்டுவிடக் கூடாதென்று நானே வந்துட்டேன். சிரார்த்தத்திற்கு தயாராகுங்கள்.
பிள்ளை: ஒய் சோம்பேறிக்கூட்டமே! போதும் நிறுத்துங்கள்! உங்கள் பித்தலாட்டமும், ஏமாற்றும் எல்லாம் என் தகப்பனாரோடு போகட்டும். இன்னுமா இந்த அயோக்கியத் தனம் ஜாக்கிரதை! இனி சிரார்த்தப் பேச்சு பேசிக்கொண்டு இங்கு நிற்க வேண்டாம். கொட்டாப்புளிபோல் இருக்கிறீரே! போம் வெளியே ஏதாவது ஒரு வேலை செய்து ஜீவியும்.
புரோகிதர்: என்ன பிள்ளைவாள்! தாங்களே இப்படிச் சொல்லலாமா? நான் தங்கள் குடும்பத்து பரம்பரை புரோகிதனல்லவா?
பிள்ளை: ஒய் வெளியே போகிறீரா? கழுத்தைப் பிடித்து தள்ளச் சொல்லட்டுமா?
புரோகிதர்: ராம ஆ ராமா ஆ சிரார்த்தம் பண்ணா விட்டால் மகா பாவம், வீணாக சுயமரியாதைக்காரனுங்க.... (இதற்குள் பிள்ளை நாயைப்பார்த்து “ச்சு” இஸ்கே! யென்று உசுப்பி விட்டார்)
புரோகிதர்: ஐயா! ஐயா! பிள்ளைவாள் தாங்கள் சிரார்த்தம் செய்யாவிட்டால் போகிறது. தயவு செய்து நாயைக் கூப்பிடுங்கள் (என்று சொல்லிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்)
-விடுதலை,9.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக