ஞாயிறு, 15 நவம்பர், 2015

சித்திரகுப்தன் -வினா விடை (சமயக்கட்டுப்பாடு சாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?)



வினா: சமயக்கட்டுப்பாடு சாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?
விடை: மனிதனை தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவது தான் சாதி சமயக்கட்டுபாடாய் இருக்கின்றது.
வினா: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?
விடை: கடவுள் எங்கு மறைந்து போவாறோ, என்று பயந்து அவரைக்க காக்க பிரயத்தனம் செய்வது தான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.
வினா: இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?
விடை: இந்தியார் 100க்கு 90 பேர் கல்வி அறிவில்லாத எழுத்து வாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான்.
வினா: ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?
விடை: தடி எடுத்தவன் தண்டக்காரனென்பதுதான் ஜனநாயக ஆட்சி.
வினா: இந்தியாவுக்கு ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை: அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி விதவை களுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜன சங்கை பெருகும்.
வினா: இந்தியா சீர்பட என்ன வேண்டும்?
விடை: இந்தியா சீர்ப்பட்டு இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாஸ்திகமும் நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.
வினா: இந்தியா அடிமையானதற்கு காரணம் என்ன?
விடை: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய் போனதற்குக் காரணம் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

இங்கர்சாலுக்கும்
பாதிரியாருக்கும்

ஒருநாள் பாதிரியார் ஒரு வருக்கும் இங்கர்சாலுக்கும் நடைபெற்ற தர்க்கமாவது;-
பாதிரியார் ஞானஸ் நானம் பற்றி ஒரேயடியாகப் புகழ்ந்தார். அதற்கு இங்கர்சால் பதில் இறுத்ததாவது:
‘எனது ஞானஸ்நானம் சுத்தமாக குளிப்பதுதான்! அது தங்கள் ஞானஸ்நானத்தை விடச் சிறந்தது’ என்றார்.
-விடுதலை,11.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக